search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidneys"

    சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.
    சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

    சிறுநீரக பாதிப்பு என்றதும் அனைவருமே அதிக கவனம் செலுத்துவர். ஆனால் பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

    கீழ் முதுகு வலி

    * கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல. ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும்.

    * சிறுநீர் வெளிர்த்தோ (அ) மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ (அ) மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

    * கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    * சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி,. சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறிகளை உடனடியாக கவனிப்பது சிறுநீரக பாதுகாப்பிற்கு உதவும். மேலும்

    * புகை பிடிக்காது இருப்பது
    * தேவையான நீர் குடித்தல்
    * காய்கறி சாறு குடித்தல்

    நல்ல உடற்பயிற்சி இவையும் சிறுநீரகத்தினைப் பாதுகாக்கும்.

    கீழ்கண்ட பழக்கங்கள் பழக பழக நிறைந்த பலன் அளிக்கும்.

    * எலுமிச்சை சாறு+ தேன் கிரீன் டீ
     வெது வெதுப்பான நீர் இவற்றில் ஏதாவது ஒன்றினை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர நிறைந்த பலன் கிடைக்கும்.

    * 10-20 நிமிடம் அன்றாட தியானம்

    * 30 நிமிடம் அன்றாட பயிற்சி, யோகா

    * 15 - 20 நிமிடம் ஏதேனும் நல்ல புத்தகம் படித்தல்

    * புரதம், நார் சத்து நிறைந்த அன்றாட காலை உணவு

    * ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் 10 நிமிடம் நடத்தல்

    * எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருத்தல்

    * 2 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடித்தல்

    * அன்றாடம் காய்கறி சாலட், பழம், இவற்றினை உண்ணுதல், போன்ற பழக்கங்களை தினமும் விடாது கடை பிடிக்க குறையாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.
    மனநல, உடல்நல பாதுகாப்போடு செய்யும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை.

    * உடல்நல, மனநலத்தோடு இருப்பவர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடைகளையும், சுகாதாரமான தோற்றத்தினையும் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே துவைத்த ஆடைகளை அணியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் கூட பழைய நைட்டியும், முடிந்த தலையுமாக இருப்பது அவர்கள் மன நலத்தினை பாதிக்கும் என்பதனை உணர வேண்டும்.

    * காலை உணவினை எப்பொழுதும் தவிர்ப்பதில்லை.

    * மதிய உணவில் அதிக கொழுப்பு இல்லாத சத்தி நிறைந்த, காய்கறி, பழங்கள் நிறைந்த உணவாக தவறாது எடுத்துக் கொள்கின்றனர்.

    * பல வேலைகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு பரபரவென்று செய்யாமல் நிதானமாய் முறைப்படி செய்கின்றனர்.

    * எட்டு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குகின்றனர்.

    * எதிலும் மனதினை ஒருநிலைப்படுத்தி வேலை செய்கின்றனர்.

    * பொதுவில் திருமணமானவர்கள் குடும்ப உறவுகளின் அன்பினால் வாழ்வினை மகிழ்ச்சியாய் எதிர் கொள்கின்றனர். இவற்றினை நாமும் கடைப்பிடித்து உடல் நலமும், மன நலமும், வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.
    காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம்.
    ‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம். இன்று சுற்றுச்சூழல் சீர்கேடு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான தகவலும் கூட’’

    இன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது. இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் வெளிப்படுகிற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், லெட், காட்மியம் போன்ற தாதுக்கள் நமது உடலுக்குள் செல்வதால், நுரையீரல் உட்பட எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்குகின்றன.

    அதாவது, மாசடைந்த காற்றினைச் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதோடு, குறைப்பிரசவம், சர்க்கரை நோய் போன்றவையும் நேரிடலாம். நுரையீரலுக்குள் செல்கிற விஷத்தன்மை உடைய உலோகப் பொருட்கள், தாதுக்கள் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக, நச்சுத்தன்மை கொண்ட சிறுநீரக நோய்(Toxic Nephropathy) ஏற்படுகிறது. சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகிற நெப்ரான்கள் பாதிப்பு அடையும்.

    எனவே, சிறுநீர் கழிக்கும்போது, ரத்தமும் கலந்து வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள புரதச்சத்து குறையத் தொடங்கும். அழற்சி வரும். இதனைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை வரும். நுரையீரலில் சளி சேர்ந்து, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தொடர் இருமல் ஏற்படும் அபாயம் உண்டு.

    அது மட்டுமின்றி நுரையீரலில் டிபி(Tuber Culosis) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாளடைவில், இந்த உறுப்பில், COPD எனக் குறிப்பிடப்படுகிற Chronic Obstructive Pulmonary Disease உண்டாகும். மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால், சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.



    இரண்டாவது கட்டமாக, காற்று மாசுபட்டால் இதயம் செயல் இழக்க நேரிடும். மறைமுகமாக இதயம் பாதிப்பு அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயமும் உருவாகும்.

    புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாக, என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் காற்று மாசுபடுவதாலும் உண்டாகும். மரங்களில் இருந்து வெளிப்படுகிற கார்பன் டை ஆக்சைடு, காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள்(Particulate Matter) போன்றவற்றை சுவாசிப்பதால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    ஏனென்றால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மை அடைந்த பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் சிசுக்கள் பிறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிறக்கிற சிசுக்களின் உடல் எடை மிகவும் குறைவாகக் காணப்படும்.

    அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால், ஏற்படுகிற பாதிப்புகளைக் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் என வகைப்படுத்தலாம். முதல் வகையான குறுகிய கால பிரச்சனையில், இருமல், சளி, மூச்சுத்திணறல் உண்டாகும்.

    நீண்ட கால பிரச்சனை என பார்க்கும்போது 75 வயதில் நேரிடுகிற இறப்பு முன்கூட்டியே 55  வயதிலேயே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காற்று மாசினால் ஏற்படுகிற உடல்நலக் குறைபாட்டினைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
    மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை பாதிப்படைய செய்யும்.
    மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். சிறுநீரகம் என்பது கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது என்று பலர் கருதுகின்றனர். அதுதான் தவறு. சிறுநீரகம் நமது உடலில் பல வேலைகளை செய்கிறது. சில ஹார்மோன்களையும் உடலுக்கு தேவையான சக்தியையும் உருவாக்குகிறது. இந்த சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் வரும் வரை அதை பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை. அந்த சிறுநீரகத்தில் பாதிப்பு வரும் போதுதான் அதனை பற்றி கவலை கொள்கிறோம். ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது.

    இந்த ஆறு பழக்கங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது

    1. பட்டினி கிடப்பது

    நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பது ஒரு கட்டத்தில் சிறுநீரகங்களை பாதிக்கும். காலை உணவினை தவிர்க்க கூடாது.

    2. அளவுக்கு அதிகமான வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துவது

    வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் பயன்படுத்தும் போது அது சிறுநீரகத்தை பாதிக்கிறது.

    3. அளவுக்கு அதிகமான மது அருந்துதல்

    மது அருந்துவது சிறுநீரகங்களை பாதிக்கிறது. எந்த உணவும் அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது.

    4. உணவில் அதிகமான உப்பு சேர்த்தால்

    உணவில் சமையல் உப்பு என்பது அளவுடன் இருக்க வேண்டும். அந்த உப்பு அதிகமாக இருக்கும் போது சிறு நீரகத்துக்கு அதிக வேலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.

    5. போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

    சிறுநீரகத்துக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமான ஓன்று. உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் மிக முக்கியமானது. இன்றைய காலத்தில் படிக்கும் இளைஞர்கள் முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு தண்ணீரை அருந்துவது இல்லை இதனால் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் தாகம் ஏற்படும் போது மட்டும் தண்ணீர் அருந்துகின்றனர். உப்புகள். நிறைந்த தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்

    6. சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது

    இவ்வாறு செய்வது மிகவும் தவறு. இவ்வாறு செய்வதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கல்லை ஏற்படுத்தும். காலப்போக்கில் சிறுநீரகத்திலும் சிறுநீரக பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் செயல்பாட்டை பாதிக்கும். இந்த தவறை நிச்சயமாக யாரும் செய்ய கூடாது.

    - இந்த ஆறு பழக்கங்கள் மட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள், அளவுக்கு அதிகமான இறைச்சி போன்ற உணவுகளும், புகைபிடித்தல், சரியான தூக்கமின்மை, நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது போன்ற செயல்களும் சிறு நீரகத்தை பாதிக்கிறது. ஒருவேளை சிறுநீரக மண்டலம் சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் போது அதனை சரிசெய்வது சற்று சிரமமான காரியம். வருமுன் காப்பதே சிறந்தது.
    குழந்தைகளுக்கு நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
    உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே 12-வது வாரத்தில் சிறுநீர் பிரிய தொடங்கி விடும். குழந்தை பிறந்த பின்பு முதல் 24 மணி நேரத்தில் சிறுநீரகம் பிரிந்து விடும். அதற்கு மேல் பிரியாவிடில், ஒன்று சிறுநீர் உற்பத்தி குறைவு அல்லது பிரிந்த நீர் வெளியேறாமல் ஏதோ தடை என்பதை அறியலாம்.

    செயலிழக்கும் அபாயம்

    ஒருவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு இதயம் சரிவர இயங்காவிடில் அவருக்கு இதயத்துடன் சேர்ந்து சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மூளையில் ரத்தக்கசிவோ, தலைக்காயமோ ஏற்படின் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.

    சிறுகுழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் போது அழுதல் பெரிய குழந்தைகள் எனில் நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, பசியின்மை, எடை கூடாமை, அடிக்கடி வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், கண்ணில் கீழ் இமையிலோ, சுற்றிலோ ஏற்படும் வீக்கம், கை-கால்களில் வீக்கம். உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.

    பிரச்சினை

    பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை சாதாரணமாக சந்திக்கும் பிரச்சினை யூரின் இன்பெக்‌ஷன், சிறுநீர் பிரியும் போது வலி, எடை குறைவு, அடிவயிற்று வலி, அடிக்கடி காய்ச்சல், சிறுநீர் பழுப்பு, சிறுநீரில் ரத்தம் போன்றவை அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு, சவ்வு போன்ற உள் பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி யூரின் இன்பெக்‌ஷன் ஏற்படலாம்.

    குழந்தைகள் படுக்க செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கு முன் நீராகாரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காபின் உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்கண்டிப்பாக சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். நடு இரவில் குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். பகல் நேரங்களில் சிறுநீரை எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க செய்ய வேண்டும். அப்போது மூத்திரைப்பையில் அதிக சிறுநீரை தாங்கும் திறன் அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை பரிசோதனை செய்து, டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் கே.எழிலரசு கூறினார்.
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

    * சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

    * அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

    * கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

    * சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

    * சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

    * சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

    * சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

    * மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

    * ஜுரம் இருக்கலாம்.

    மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

    * திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

    * உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

    * உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 
    ×