search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்
    X

    சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்

    சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.
    சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

    சிறுநீரக பாதிப்பு என்றதும் அனைவருமே அதிக கவனம் செலுத்துவர். ஆனால் பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

    கீழ் முதுகு வலி

    * கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல. ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும்.

    * சிறுநீர் வெளிர்த்தோ (அ) மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ (அ) மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

    * கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    * சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி,. சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறிகளை உடனடியாக கவனிப்பது சிறுநீரக பாதுகாப்பிற்கு உதவும். மேலும்

    * புகை பிடிக்காது இருப்பது
    * தேவையான நீர் குடித்தல்
    * காய்கறி சாறு குடித்தல்

    நல்ல உடற்பயிற்சி இவையும் சிறுநீரகத்தினைப் பாதுகாக்கும்.

    கீழ்கண்ட பழக்கங்கள் பழக பழக நிறைந்த பலன் அளிக்கும்.

    * எலுமிச்சை சாறு+ தேன் கிரீன் டீ
     வெது வெதுப்பான நீர் இவற்றில் ஏதாவது ஒன்றினை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர நிறைந்த பலன் கிடைக்கும்.

    * 10-20 நிமிடம் அன்றாட தியானம்

    * 30 நிமிடம் அன்றாட பயிற்சி, யோகா

    * 15 - 20 நிமிடம் ஏதேனும் நல்ல புத்தகம் படித்தல்

    * புரதம், நார் சத்து நிறைந்த அன்றாட காலை உணவு

    * ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் 10 நிமிடம் நடத்தல்

    * எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருத்தல்

    * 2 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடித்தல்

    * அன்றாடம் காய்கறி சாலட், பழம், இவற்றினை உண்ணுதல், போன்ற பழக்கங்களை தினமும் விடாது கடை பிடிக்க குறையாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.
    மனநல, உடல்நல பாதுகாப்போடு செய்யும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை.

    * உடல்நல, மனநலத்தோடு இருப்பவர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடைகளையும், சுகாதாரமான தோற்றத்தினையும் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே துவைத்த ஆடைகளை அணியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் கூட பழைய நைட்டியும், முடிந்த தலையுமாக இருப்பது அவர்கள் மன நலத்தினை பாதிக்கும் என்பதனை உணர வேண்டும்.

    * காலை உணவினை எப்பொழுதும் தவிர்ப்பதில்லை.

    * மதிய உணவில் அதிக கொழுப்பு இல்லாத சத்தி நிறைந்த, காய்கறி, பழங்கள் நிறைந்த உணவாக தவறாது எடுத்துக் கொள்கின்றனர்.

    * பல வேலைகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு பரபரவென்று செய்யாமல் நிதானமாய் முறைப்படி செய்கின்றனர்.

    * எட்டு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குகின்றனர்.

    * எதிலும் மனதினை ஒருநிலைப்படுத்தி வேலை செய்கின்றனர்.

    * பொதுவில் திருமணமானவர்கள் குடும்ப உறவுகளின் அன்பினால் வாழ்வினை மகிழ்ச்சியாய் எதிர் கொள்கின்றனர். இவற்றினை நாமும் கடைப்பிடித்து உடல் நலமும், மன நலமும், வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.
    Next Story
    ×