search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல் பயிற்சி"

    • நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தரும்.
    • உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

    நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.

    இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.

    • அதிகப்படியான ரத்த சர்க்கரை ரத்த ஓட்டத்தில் தங்கலாம்.
    • நீரிழிவு மேலாண்மைக்கு உடற்பயிற்சியே அடிப்படை.

    ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரது உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது தேவையான அளவு பயன்படுத்த முடியாது. மற்றும் போதுமான இன்சுலின் இல்லாத நிலையில், அதிகப்படியான ரத்த சர்க்கரை ரத்த ஓட்டத்தில் தங்கலாம். இது கவனிக்கப்படாவிட்டால், இதய நோய்கள், பார்வை இழப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க, உடற்பயிற்சியில் வலிமை பயிற்சியை இணைப்பது மிகவும் முக்கியமானது. கட்டமைக்கப்பட்ட மற்றும் முற்போக்கான வலிமை பயிற்சி உடல் இன்சுலினை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை மேம்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் உடலை சிறப்பாக சுற்றி வர அனுமதிக்கிறது.

    உலக அளவில், அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு 30 நிமிட உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவு நோயை தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் உடல் செயல்பாடு முக்கியமானது. இருப்பினும், இது நீரிழிவு சமன்பாட்டில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகும். இந்த நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட பலர் உடற்பயிற்சி செய்ய விரும்புவதில்லை.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு குறைந்த உடல் உறுதி மற்றும் செயல்திறன் வரம்பு இருப்பது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். மருத்துவர்களால் அடிக்கடி பரிந்துரைக்கப்படும் மிதமான முதல் தீவிரமான உடற்பயிற்சி நிலைகளை பராமரிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகிறது. மேலும், பெரும்பாலும், சிரமங்கள், சோர்வுகள் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கு வழிவகுக்கும்.

    நீரிழிவு மேலாண்மைக்கு உடற்பயிற்சியே அடிப்படை. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சி என்பது உங்களை நகர்த்தும் எந்த செயலையும் குறிக்கும். அது நடனம், நீச்சல், நடைபயிற்சி என எந்த வகையாக கூட இருக்கலாம்.

    நீங்கள் செய்ய விரும்பும் செயல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும். வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் அல்லது வாரத்திற்கு மொத்தம் 150 நிமிடங்களாவது 30 நிமிட மிதமான முதல் வீரியமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியை பரிந்துரைக்கிறது. வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு உங்கள் செயல்பாட்டை நீங்கள் பரப்பலாம் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதை தவிர்க்கவும்.

    தினசரி வேலைகள் கூட எளிய வழி நடைபயிற்சிக்கு உதவும். உதாரணமாக படிக்கட்டுகளில் ஏறி நடப்பது, உங்கள் பணியிடம் குறைந்த தூரத்தில் இருந்தால் நடக்கலாம், குழந்தைகளுடன் சுறுசுறுப்பாக விளையாடலாம், தொலைபேசி அழைப்பிற்கு பதிலாக உங்கள் சக ஊழியர்களின் அறைக்கு நடக்கலாம், உங்களுக்கு பிடித்த டிவி சீரியலை பார்க்கும்போது டிரெட்மில்லில் நடக்கலாம். இவ்வாறு நாம் தினந்தோறும் செய்யக்கூடிய வேலைகளில் கூட நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

    வியர்வை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி. இது குளுக்கோசை ஆற்றலாக மாற்ற உதவுகிறது, இது ரத்த ஓட்டத்தில் இன்சுலினை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலின் பல்வேறு பாகங்களை உடற்பயிற்சி செய்யும் போது, எந்தவொரு சிக்கல்களையும் தடுக்க மிகவும் முக்கியம்.

    நீச்சலில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது ஒரு ஆரோக்கியமான பயிற்சி மற்றும் மூட்டுகளில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. இது ஒரேநேரத்தில் மேல் மற்றும் கீழ் உடலில் வேலை செய்கிறது.

    சைக்கிள் ஓட்டுதல் என்பது ஏரோபிக் மற்றும் காற்றில்லா செயல்பாடுகளின் கலவையாகும், இது நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய அபாயங்களை குறைக்க உதவுகிறது. இருப்பினும், மூட்டுப்பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்துவிட்டு நடைபயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    • இளமையை பெருக்குவதோடு நோய் தாக்கங்களை அண்ட விடாமலும் தடுக்கின்றது.
    • உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைத்து இறப்பு வீதத்தை குறைக்கின்றது.

    உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை தாண்டிய ஒரு பழக்கம். உங்கள் சக பணியாளர்களிடம் இருந்தோ அல்லது உங்கள் நண்பர்களிடம் இருந்தோ நிச்சயமாக நீங்கள் கருத்துகளை பெற்றிருப்பீர்கள். உடல் உடற்பயிற்சி என்பது உடலிலும் மனதிலும் நன்மை பயக்கும் ஒரு அனுபவமாகும், எனவே அதை பயிற்சி செய்பவர்களுக்கு அது உண்மையில் வியர்வை ஏன் செலுத்துகிறது என்பதை அறிவோம்.

    உடல் செயல்பாடு உங்கள் மனம், உங்கள் உடல், உங்கள் வளர்சிதை மாற்றம், ஹார்மோன்கள், எலும்பு அமைப்பு, நுரையீரல் திறன், ரத்த அளவு, அறிவாற்றல் செயல்பாடு மற்றும் பலவற்றை மாற்றும். உடற்பயிற்சி செய்வது இந்த நோயுடன் தொடர்புடைய கூடுதல் ஆரோக்கிய பயத்தின் அபாயத்தை குறைக்கும், மேலும் இது ஒரு முக்கிய அங்கமாகும்.

    உடற்பயிற்சி பலவிதங்களில் நம்மை காக்கின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், அழகான உடல் அமைப்பை பெற்றுத்தரவும் உடற்பயிற்சி உதவுகின்றது. மன அமைதிக்கு உடற்பயிற்சி உதவுகின்றது. உடல் எடையை குறைக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்திற்கும், இறப்பு வீதத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைத்து இறப்பு வீதத்தை குறைக்கின்றது.

    இளமையை பெருக்குவதோடு நோய் தாக்கங்களை அண்ட விடாமலும் தடுக்கின்றது. நீரிழிவின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றது. இதயத்தின் தசைகளை வலுப்படுத்துவதற்கும், நரம்பு மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகின்றது.

    தினமும் உடற்பயிற்சி செய்வோர் தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டே செல்கின்றனர். எலும்புகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகின்றது. உடலில் சேரும் கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற உதவும். தெளிவான மன நிலையை மேம்படுத்தும்.

    உடற்பயிற்சியின் நன்மைகள்:

    ஆயுட்காலம் அதிகரிக்கிறது

    அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

    உற்சாகமாக இருக்க உதவிபுரிகிறது

    உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது

    எடை குறைக்க உதவுகிறது

    புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது

    நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது

    உங்கள் இரவு ஓய்வை மேம்படுத்த உதவுகிறது

    எலும்புகளை பலப்படுத்துகிறது

    • உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
    • நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம்.

    நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும். நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.

    நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள். நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது அ=862. கி.கலோரிகள் , பெ=739. கி.கலோரிகள் எரிக்கப்படும். நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது அ=603. கி.கலோரிகள், பெ=518. கி.கலோரிகள் எரிக்கப்படும்.

    குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.

    நீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது. நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

    • நீச்சல் பயிற்சி மாதவிலக்கு கோளாறுகளை குணமாக்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம்.

    உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி நீச்சல் ஆகும். எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சல் பிரதானமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாகவும், ஆரோக்கியம் சீராகவும் இருக்கும்.

    உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து எடை சீராகிறது. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.

    மெனோபாஸ் காலங்களில் உடல் சோர்வு, வெறுப்பு, எதிலும் ஈடுபாடு ஏற்படாத மனநிலை, கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக நீச்சல் பயிற்சி அமைகிறது. தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.

    நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சீராவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவ கால நெருக்கடிகள் அகன்று, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

    நீச்சல் நல்ல மூச்சுப்பயிற்சியாக அமைகிறது. அதன் மூலம் நுரையீரல் வலுப்பெற்று சுவாச பிரச்சினைகள் நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைகிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது இதயம் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டமும் சீராகும். அதன் மூலம் முதுகு, மூட்டுகள், தண்டுவடம் ஆகியவை வலுவாகின்றன. நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைவதால், செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு அகலும். பசியைத் தூண்டச் செய்வதுடன், மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும்.

    • இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார்.
    • தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்.

    கடலூர்:

    என்.சி.சி. மாணவர்கள் கடலில் உள்ள அனைத்து சூழ்நிலைகளை புரிந்து கொள்ள ஏதுவாகவும், அதனால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கடற்கரைகளை சுத்தப்படுத்துதல், இரத்ததான முகாம் போன்ற முகாம்கள், பேரணிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கப்பற்படை பிரிவு என்.சி.சி. மாணவர்களுக்கு கடலில் நீந்தவும், பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார். இதையடுத்து என்.சி.சி. மாணவர்களுக்கு முதற்கட்டமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 120 ஆண் மற்றும் பெண் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் பாய்மர கப்பல் சாகச பயணம் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கும் 60 மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதையடுத்து அவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் அழைத்து செல்லப்படுவார்கள். தொடர்ந்து காரைக்காலில் இருந்து மீண்டும் பாண்டி ச்சேரிக்கு கடலில் பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின் போது கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் போன்ற கடற்கரை யோரங்களில் நின்று தினமும் காலையில் பயிற்சி அளிக்கப்ப டுவதுடன் முக்கிய அதிகாரிகள் மூலம் தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்..

    • வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி வரை தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறும்.
    • மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 3-ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம்நடக்கிறது.

    இந்த பயிற்சி முகாம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி வரை தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறும்.

    தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும்.

    காலை 9 மணி முதல் 10 மணி வரை மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீச்சல் கற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது வேளச்சேரி, ஷெனாய் நகர், நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க உள்ளது.
    • 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் இந்த வகுப்புக்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் கோடை காலத்தையொட்டி சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கிறது. இதுவரை வேளச்சேரியில் மட்டும் இந்த பயிற்சி நடந்து வருகிறது. இதனால் தனியார் பயிற்சி மையங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்தது.

    இதையடுத்து தற்போது வேளச்சேரி, ஷெனாய் நகர், நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க உள்ளது.

    12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் இந்த வகுப்புக்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டரங்கில் மட்டும் ரூ.2,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 25 முதல் இந்த பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடக்கிறது. கடந்த 25-ந்தேதி முதல் மே மாதம் 7-ந்தேதி, மே 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை, மே 21-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை. மேலும் தினமும் 3 ஷிப்டுகள் பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • முதல் கட்டமாக நேற்று முதல் 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.
    • மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

    கிருஷ்ணகிரி 

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டப்பிரிவு அலுவலகத்தின் வாயிலாக நீந்தக்கற்றுக்கொள்ளுதல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக நேற்று முதல், 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இரண்டாம் கட்டமாக 9-ம் தேதி முதல் 21.5.2023-வரை , 3-ம் கட்டமாக 23- ம் தேதி முதல் முதல் 4.6.2023 வரை 12 நாட்களுக்கும் நடைபெற உள்ளது.

    பயிற்சி நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நீச்சல் கற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிக்கட்டணமாக ரூ.1200 ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் வசூலிக்கப்படவுள்ளது.

    மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

    எனவே, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயிற்சிக்கட்டணத்திற்கான விண்ணப்பத்தினை நீச்சல் குளத்தில் பெற்று கட்டணத்தொகையினை செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளு ம்மாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    மேலும், விவரங்களுக்கு நீச்சல்குள பணியாளர் தொலைபேசி எண் 9894234638, 7810039008 அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலைபேசி எண் 7401703487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப ்படுகிறார்கள். 

    • நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.
    • இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கும் மாணவர்கள் நீர் தேக்கங்கள், ஏரி, குளங்கள், ஆறுகள், கல் குவாரிகள், மற்றும் கிணறுகள் ஆகிய வற்றில் நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு போதிய நீச்சல் பயிற்சியின்றி நீர்நிலைகளில் இறங்குவதை அனைவரும் தவிர்ப்பதுடன், ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் மாணவர்கள் நீச்சல் அடிப்பதும் மற்றும் குளிப்பதை தடுக்க அனை வருக்கும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளில் நீர் தேங்கியி ருப்பின் அப்பகு தியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து பெற்றோர்க ளும் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை ஆபத்தான பகுதிகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளு தலுக்கும் மற்றும் குளிப்ப தற்கும் அனுமதிக்க கூடாது, வீடுகளில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் தொட்டி களில் குழந்தைகள் தவறி விழாதவாறு அவற்றை மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 25-ந்தேதி தொடங்குகிறது.
    • நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 25.4.2023 முதல் 4.6.2023 வரையிலான காலங்களில் நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அனைவரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக் கலாம்.

    இந்த திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,000 ஆகும். இந்த தொகையை phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருக்க வேண்டும்.

    நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் முதற் கட்டமாக 25.4.2023 முதல் 7.5.2023 வரையிலும், இரண்டாம் கட்டமாக 9.5.2023 முதல் 21.5.2023 வரையிலும், மூன்றாம் கட்டமாக 23.5.2023 முதல் 4.6.2023 வரையிலும் நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நேரம் காலை 7.30 மணி முதல் 8.30 வரை மற்றும் 8.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகும்.

    நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 12 நாட்களுக்கு ஒருவேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கான தொகை ரூ.1,000 (18% GST) via phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்கள் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அரங்கம்-04575 299293, மாவட்ட விளையாட்டு அலுவலர்-74017 03503, நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மானாமதுரை ரோடு, ஆர்.டி.எம். கல்லூரி அருகில், சிவகங்கை என்ற அலுவலக முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×