search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rejuvenation"

    • உடற்பயிற்சி செய்வதால் மனமும் வலிமை பெறுகிறது.
    • உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.

    உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

    கண்களுக்கான உடற்பயிற்சி

    இரு உள்ளங்கைகளையும், இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்திக் கொள்ள வேண்டும். பின் ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விட வேண்டும். இதுபோல் ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலைக் கொண்டு கண்களை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    காலுக்கான உடற்பயிற்சி

    இப்பொது அதிகம் பேர் பிளாட் வீடுகளில் தான் குடியிருக்கின்றனர். மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி இறங்குவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்கும் போது, முழங்கால்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை நீக்கி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே முடிந்த வரை படிகளின் வழியே ஏறி இறங்குங்கள். லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. வயதான பெண்களுக்கு இது பொருந்தாது.

    கழுத்திற்கான உடற்பயிற்சி

    பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும், இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நிமிர்ந்து தலையை மெதுவாக சுழற்ற வேண்டும். இதேபோல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் அழகாக இருக்கும்.

     சோம்பேறித்தனம்

    இன்று நாம் கடைக்கு சென்று கூட பொருள் வாங்க வேண்டாம். ஏனென்றால் அனைத்து பொருட்களுக்கும் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. நமது உடலுக்கு வேலையை கிடையாது. இது நமது வாழ்வில் மிகப்பெரிய சோம்பேறித்தனத்தை உண்டாக்குகிறது. சோம்பேறித்தனத்தை சரி செய்ய தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சோம்பேறித்தனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை முறித்து புத்துணர்வு பெற முடியும்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஒரு நாளைக்கு தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பணிகள் மற்றும் அலுவலக பணிகள் என அனைத்திலும் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்க்கு நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்வதற்கு, நமது உடல் ஆரோக்கியம் அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று.

    நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு அவசியமானதாக கருதுகிறோமோ, அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வலி, அசதி, மற்றும் உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

    • ஆள்காட்டி விரலுக்கும் நடுவே அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
    • கால் விரல்களை தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் அமைதியாகும்.

    மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும், நம் உடலில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கும் பாடி மசாஜ், அரோமாதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம்.

    இதேபோல, உடலில் குறிப்பிட்ட சில பகுதியில் இருக்கும் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் `ரெஃப்லெக்சாலஜி' சிகிச்சை முறையை பற்றி பார்க்கலாம்.

     `ரெஃப்லெக்சாலஜி' அக்குபஞ்சர் போன்ற ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருந்தாலும், இதில் ஊசிகளின் பயன்பாட்டிற்கு இடமில்லை. கை, கால், காது, கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

    நீண்ட நேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்பாடுகளால் உடல் சோர்வடையும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் தளர்வடையும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.

    தலை, முதுகு, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடுவதற்கும் `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சை செய்து கொள்ளப்படுகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியுடன் தொடர்புடைய ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை குறைத்து, அடிக்கடி தலைவலி வருவதில் இருந்து நிவாரணம் தருகிறது.

    மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு இயல்பாய் வரக்கூடிய வயிற்று வலியைக் கூட ரெஃப்லெக்சாலஜி சிகிச்சையின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

    ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை செய்து கொண்டவர்களில் பல பேர் அவர்களின் தூக்க நிலை சீரானதாகக் கூறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாவதன் பயன் நிறைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதேபோன்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த உதவுகிறது இந்த சிகிச்சை.

    * நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.

    * கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    * வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள்

    தூண்டப்பட்டு, மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.

    * விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்கு கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.

    ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.

    மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.

    கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சினைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!

    ரெஃப்லெக்சாலஜி, மசாஜ் போன்ற உடல்-அழுத்தம் நிறைந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முதலில் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள்.

    பிறகென்ன, மொபைல் போன்கள், லேப்டாப்களை சிறிது நேரம் ஓரமாக வைத்து விட்டு ஜாலியோ ஜிம்கானாவென இந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்… சிறிது நேரம் கவலைகளுக்கும், கடமைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு தியான நிலையில் லயித்து இருப்போமே. என்ன சொல்கிறீர்கள்?!

    • நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தரும்.
    • உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

    நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.

    இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.

    ×