search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aromatherapy"

    • மசாஜ் செய்வதால் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.
    • மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான்.

    மன அழுத்தத்தை போக்கும் மசாஜ்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் உடல் நலமும், மன நலமும் மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

    அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவசர உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சினை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது.

    இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான்.

    மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை. இந்தியாவில் ஆயுர்வேத மசாஜ் மிகவும் பிரபலமானது.

    மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், ஒருசில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும். மேலும் மன அழுத்தத்தைப் போக்க செய்யப்படும் ஒவ்வொரு மசாஜும் ஒவ்வொரு விதமான நன்மைகளை கொண்டுள்ளது. இத்தகைய மசாஜ்களை தொடர்ந்து செய்துவந்தால், மன அழுத்தம் குறைவதோடு, உடல் வலியின்றி உடலும் ரிலாக்சாக இருக்கும்.

     தாய் மசாஜானது தாய்லாந்தின் பண்டைய உடலின் நடுக்கோட்டின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு மசாஜ் ஆகும். இந்த மசாஜின் போது உடலின் நடுக்கோட்டில் அமைந்துள்ள அனைத்து எனர்ஜிகளையும் சீராக உடல் முழுவதும் பரவச் செய்து, மன அழுத்தத்தைப் போக்கும் தன்மையுடையது.

     ஆயுர்வேத மசாஜில் மூலிகைகளும், இயற்கை எண்ணெய்களையும் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படும். மேலும் இதில் கையளவு வேகவைத்த அரிசியை, மஸ்லின் துணியில் போட்டு கட்டி, அதனை இயற்கை எண்ணெயில் நனைத்து உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படும். இதை செய்யும் போது உடலின் நரம்புகள் அனைத்து நன்கு சீராக இயங்கி, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

    அக்குபிரஷர் என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழுத்தத்தைக் கொடுத்து நிவாரணம் அளிக்கும் முறையை அடிப்படியாக கொண்டது. இந்த மசாஜை கைகளாலோ அல்லது அதற்கான ஒரு கருவி மூலமாகவோ செய்யலாம்.

    ஸ்வீடிஸ் மசாஜிலும் பல்வேறு வகையான இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு, ஒருசில டெக்னிக்கில் மசாஜ் செய்யப்படுவதால், மன அழுத்தத்திற்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

     அரோமாதெரபி என்பது வெறும் மசாஜ் மட்டுமல்ல, இது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு முறை எனலாம். இதில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்திகள், அனைத்து உணர்வுகளையும் தூண்டி, மசாஜின் இறுதியில் உடலுக்கும், மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சியைத் தரும்.

    • ஆள்காட்டி விரலுக்கும் நடுவே அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
    • கால் விரல்களை தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் அமைதியாகும்.

    மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும், நம் உடலில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கும் பாடி மசாஜ், அரோமாதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம்.

    இதேபோல, உடலில் குறிப்பிட்ட சில பகுதியில் இருக்கும் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் `ரெஃப்லெக்சாலஜி' சிகிச்சை முறையை பற்றி பார்க்கலாம்.

     `ரெஃப்லெக்சாலஜி' அக்குபஞ்சர் போன்ற ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருந்தாலும், இதில் ஊசிகளின் பயன்பாட்டிற்கு இடமில்லை. கை, கால், காது, கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

    நீண்ட நேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்பாடுகளால் உடல் சோர்வடையும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் தளர்வடையும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.

    தலை, முதுகு, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடுவதற்கும் `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சை செய்து கொள்ளப்படுகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியுடன் தொடர்புடைய ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை குறைத்து, அடிக்கடி தலைவலி வருவதில் இருந்து நிவாரணம் தருகிறது.

    மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு இயல்பாய் வரக்கூடிய வயிற்று வலியைக் கூட ரெஃப்லெக்சாலஜி சிகிச்சையின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

    ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை செய்து கொண்டவர்களில் பல பேர் அவர்களின் தூக்க நிலை சீரானதாகக் கூறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாவதன் பயன் நிறைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதேபோன்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த உதவுகிறது இந்த சிகிச்சை.

    * நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.

    * கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    * வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள்

    தூண்டப்பட்டு, மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.

    * விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்கு கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.

    ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.

    மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.

    கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சினைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!

    ரெஃப்லெக்சாலஜி, மசாஜ் போன்ற உடல்-அழுத்தம் நிறைந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முதலில் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள்.

    பிறகென்ன, மொபைல் போன்கள், லேப்டாப்களை சிறிது நேரம் ஓரமாக வைத்து விட்டு ஜாலியோ ஜிம்கானாவென இந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்… சிறிது நேரம் கவலைகளுக்கும், கடமைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு தியான நிலையில் லயித்து இருப்போமே. என்ன சொல்கிறீர்கள்?!

    ×