search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body massage"

    • ஆள்காட்டி விரலுக்கும் நடுவே அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
    • கால் விரல்களை தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் அமைதியாகும்.

    மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும், நம் உடலில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கும் பாடி மசாஜ், அரோமாதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம்.

    இதேபோல, உடலில் குறிப்பிட்ட சில பகுதியில் இருக்கும் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் `ரெஃப்லெக்சாலஜி' சிகிச்சை முறையை பற்றி பார்க்கலாம்.

     `ரெஃப்லெக்சாலஜி' அக்குபஞ்சர் போன்ற ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருந்தாலும், இதில் ஊசிகளின் பயன்பாட்டிற்கு இடமில்லை. கை, கால், காது, கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

    நீண்ட நேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்பாடுகளால் உடல் சோர்வடையும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் தளர்வடையும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.

    தலை, முதுகு, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடுவதற்கும் `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சை செய்து கொள்ளப்படுகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியுடன் தொடர்புடைய ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை குறைத்து, அடிக்கடி தலைவலி வருவதில் இருந்து நிவாரணம் தருகிறது.

    மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு இயல்பாய் வரக்கூடிய வயிற்று வலியைக் கூட ரெஃப்லெக்சாலஜி சிகிச்சையின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

    ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை செய்து கொண்டவர்களில் பல பேர் அவர்களின் தூக்க நிலை சீரானதாகக் கூறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாவதன் பயன் நிறைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதேபோன்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த உதவுகிறது இந்த சிகிச்சை.

    * நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.

    * கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    * வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள்

    தூண்டப்பட்டு, மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.

    * விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்கு கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.

    ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.

    மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.

    கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சினைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!

    ரெஃப்லெக்சாலஜி, மசாஜ் போன்ற உடல்-அழுத்தம் நிறைந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முதலில் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள்.

    பிறகென்ன, மொபைல் போன்கள், லேப்டாப்களை சிறிது நேரம் ஓரமாக வைத்து விட்டு ஜாலியோ ஜிம்கானாவென இந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்… சிறிது நேரம் கவலைகளுக்கும், கடமைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு தியான நிலையில் லயித்து இருப்போமே. என்ன சொல்கிறீர்கள்?!

    முதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.

    திராட்சை எண்ணெய்:

    இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.

    நல்லெண்ணெய்:

    உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
    தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.
    தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

    தேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

    ஆமணக்கு எண்ணெய்: முழங்கால் வலி உள்ளவர்கள் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ்  செய்யவும்.



    கடுகு எண்ணெய்: மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு  வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

    தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.

    ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே  வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

    தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.

    சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.
    ×