search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி
    X

    தருமபுரியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி

    • வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி வரை தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறும்.
    • மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 3-ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம்நடக்கிறது.

    இந்த பயிற்சி முகாம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி வரை தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறும்.

    தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும்.

    காலை 9 மணி முதல் 10 மணி வரை மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீச்சல் கற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×