என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீச்சல் பயிற்சி இல்லாதவர்கள் நீர் நிலைகளில் குளிக்க கூடாது
- நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.
- இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கும் மாணவர்கள் நீர் தேக்கங்கள், ஏரி, குளங்கள், ஆறுகள், கல் குவாரிகள், மற்றும் கிணறுகள் ஆகிய வற்றில் நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு போதிய நீச்சல் பயிற்சியின்றி நீர்நிலைகளில் இறங்குவதை அனைவரும் தவிர்ப்பதுடன், ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் மாணவர்கள் நீச்சல் அடிப்பதும் மற்றும் குளிப்பதை தடுக்க அனை வருக்கும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளில் நீர் தேங்கியி ருப்பின் அப்பகு தியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து பெற்றோர்க ளும் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை ஆபத்தான பகுதிகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளு தலுக்கும் மற்றும் குளிப்ப தற்கும் அனுமதிக்க கூடாது, வீடுகளில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் தொட்டி களில் குழந்தைகள் தவறி விழாதவாறு அவற்றை மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்