search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூச்சுத்திணறல்"

    • பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும்.
    • காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள்.

    எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற்றாக எப்போதும் ஜூஸ் மட்டுமே கொடுக்கக்கூடாது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுப்பதும் தவறான பழக்கம். குழந்தைகள் ஜூஸ் பருகுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா?

    காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுப்பதுதான் சரியானது. குறிப்பாக காலை 11 மணி, பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் கொடுக்கலாம். தினமும் ஒரே வகையான பழ ஜூஸ்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    சில வகை பழங்களை குழந்தைகள் சாப்பிட விரும்பாது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது.

    அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். இரவில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

    அதிலும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஜூஸ் ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே ஜூஸ் கொடுக்கத் தொடங்கலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களாக சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

    • விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
    • இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன.

    நிகோடின்:

    புகைப்பழக்கம் கொண்டவர்களை ஈர்க்கும் விதமாக விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவை புகைப்பிடிப்பவர்களுக்கு உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அதற்கு பதிலாக இளைஞர்களிடத்தில் நிகோடினால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும். இதயம் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகள் குறித்து பார்ப்போம்...

    வழக்கமான சிகரெட்டுகளில் காணப்படும் போதைப் பொருளான நிகோடின் பெரும்பாலான இ-சிகரெட்டுகளிலும் உள்ளது. மூச்சுக்குழாய் வழியாக ஊடுருவும் நிகோடின் நுரையீரலில் தங்கிவிடும். அது நுரையீரலை விட்டு நீங்காமல் நாளடைவில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இருமல், மூச்சுத்திணறல், சோர்வு, நெஞ்சு வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இறுதியில் மரணத்துக்கு வழிவகுத்துவிடும்.

    மூளை வளர்ச்சி:

    டீன் ஏஜ் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மூளை வளர்ச்சிக்கு நிகோடின் தடையாக அமையும். மூளைக்கு தீங்கு விளைவிப்பதோடு கற்றல் திறனை பாதித்துவிடும். கவனச்சிதறலையும் உண்டாக்கிவிடும்.

    மூச்சுக்குழாய் அழற்சி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் டயசெடைல் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவை கடுமையான நுரையீரல் நோயான மூச்சுக்குழாய் அழற்சிக்கு வித்திடும். ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி உடல் நலனை மோசமாக்கிவிடும். மூச்சுப்பயிற்சி செய்வது போன்று தினமும் பலூன் ஊதி பயிற்சி செய்வதும் நல்லது. மூச்சுக்குழாய்க்கு சிறந்த பயிற்சியாக அமையும். அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

    இதய நோய்:

    இ-சிகரெட்டுகள் இதயம் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய் அபாயத்தை அதிகரிக்கச்செய்துவிடும்.

    மன ஆரோக்கியம்:

    நிகோடின் உடலில் சேரும் நச்சு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உடலுக்குள் அதன் வீரியம் அதிகரிக்கும்போது கவலை, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    கர்ப்பிணி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் நிகோடின் மற்றும் தீங்கு விளைவிக்கும் சில ரசாயனங்கள் உள்ளன. அதனை கர்ப்பிணிகள் நுகர்வது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

    விடுபட வழிமுறைகள்:

    புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சித்தாலும் சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதற்கு இசைவு கொடுக்காது. அது உடலில் சேர்ந்து பழக்கப்பட்டுவிட்டதால் அதன் தேவையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும். அதனால் மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. புகைப்பிடிக்க வேண்டும் என்று நிகோடின் தூண்டிவிடும்போது கவனத்தை திசைதிருப்ப வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இசையை கேட்டு மகிழலாம்.

    புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் குடிநீர் பருகலாம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலில் சேர்ந்திருக்கும் நிகோட்டினை வெளியேற்ற உதவும். புகைப் பிடிக்கும் ஆசையை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வதும் நிகோடின் ஏற்படுத்தும் புகைப்பழக்க பசியை கட்டுப்படுத்த உதவும். சூயிங்கம் போன்ற இனிப்பு இல்லாத மிட்டாய் வகைகளை சுவைத்தும் வரலாம்.

    புகைப்பழக்கத்தில் இருந்து சட்டென்று மீண்டு வருவது கடினமானது. புகைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பும் சமயங்களில் வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம். அதற்கு மாற்றான பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

    அப்படியும் முடியாத பட்சத்தில் தினமும் ஒருமுறை மட்டும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றலாம். ஒருவாரம் கடந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று தீர்மானித்து படிப்படியாக புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சிக்கலாம்.

    • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

    பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

    இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

    வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

    குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

    பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

    நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

    கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

    • ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

    • சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரிக்க ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். விவசாயி. அவரது மணைவி ராஜகுமாரி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரித்து ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி அவர் கர்ப்பமானார். தற்போது ராஜகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தமிழரசன் தனது மனைவியை வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி இறந்தார். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக ராஜகுமாரி இறந்துள்ளார். அவரது வயிற்றில் 2 குழந்தைகள் இருந்தது. அதுவும் இறந்துபோனது என தெரிவித்தனர். இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார்.
    • பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    விழுப்புரம்: 

     விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் சரகம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (வயது23). இத்தம்பதிக்கு 2 மாதம் 10 நாட்களேயான ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு வயிற்கு ப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை மயங்கியுள்ளது.

    உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்து மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,

    உடலுறவின் போது இஸ்ரேலை சேர்ந்த பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்த வழக்கில் காதலன் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மும்பை:

    இஸ்ரேலை சேர்ந்த யாகோப் மற்றும் அவரது பெண் தோழியும் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

    இதனை விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இஸ்ரேலுக்கு சடலத்தை பெற்று சென்றனர். இந்நிலையில், அந்த பெண்ணின் மரணம் தொடர்பான உடற்கூறாய்வு அறிக்கை மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், உடலுறவின் போது கழுத்து பகுதியில் யாகோப் கூடுதல் அழுத்தம் கொடுத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மும்பை போலீசார், யாகோப் மீது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    யாகோப் தற்போது இஸ்ரேலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×