search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infant death"

    • ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

    ×