என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் மரணம்"

    • மகளிர் மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர்.
    • சிறுவர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் கன்டோன்மென்ட் துவாரபுடியில் உள்ள மகளிர் மன்ற அலுவலகத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதே பகுதியை சேர்ந்த உதய் (வயது 8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய சிறுவர்கள் 4 பேரும் தெருவில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது மகளிர் மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர்.

    கார் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். காருக்குள் காற்று போகாததால் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைகள் கார் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை.

    சிறுவர், சிறுமிகள் காருக்குள் இருந்து கதறி அழுதனர். கார் கதவு மூடப்பட்டு இருந்ததால் அவர்களின் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.

    சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேரும் காருக்குள்ளேயே இறந்து விட்டனர்.

    விளையாடச் சென்ற சிறுவர், சிறுமிகள் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் தேடிச் சென்றனர். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் மகளிர் மன்ற அலுவலகத்தில் இருந்த ஊழியர் காரை பார்த்தபோது அதில் 4 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அருகில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் கார் கதவை திறந்து காரில் இருந்து மீட்டனர்.

    சிறுவர்களை பரிசோதித்து பார்த்த போது மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

    சிறுவர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இறந்தவர்களில் சாருமதி, சரிஷ்மா இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏமன் உள்நாட்டு போரால் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

    சனா:

    அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. ஏமன் நாட்டு அரசுக்கு எதிராக ஹுதி என்ற புரட்சி அமைப்பினர் போராடி வருகிறார்கள்.

    இவர்களுக்கு பல அரசியல் தலைவர்களும் பக்கபலமாக உள்ளனர். தலைநகரம் சனா உள்ளிட்ட பல பகுதிகளை ஹுதி அமைப்பினர் கைப்பற்றி வைத்துள்ளனர்.

    பெரும்பாலான பகுதி அரசிடம் உள்ளது. இது தவிர மேலும் 2 பகுதிகளை 2 அமைப்புகள் கைப்பற்றி வைத்துள்ளன. அவற்றை கைப்பற்றுவதற்கு அரசு படைகள் போராடி வருகிறது.

    நாட்டில் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொருவர் கையில் இருப்பதால் அங்கு அரசு அமைப்பே செயல்படவில்லை. மக்களுக்கு தேவையான எந்த பொருட்களும் சப்ளை இல்லை.

    இதன் காரணமாக மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பசி - பஞ்சத்தில் சிக்கி இருப்பதாக ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது.

    இது குழந்தைகளை மிகவும் பாதித்திருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

    5 வயதுக்கு உட்டப்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்களை காப்பாற்ற உணவோ மற்றும் மருந்து பொருட்களோ கிடைக்க வில்லை. இதன் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

    ஏமன் நாட்டு போரில் இதுவரை 50 அயிரம் பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

    ×