என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvottiyur"
- வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும்
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் தங்கநாக கவசம் அணிந்த நிலையில் காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தை யொட்டிய 3 நாட்கள் மட்டும் மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு தங்க நாக கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பி ராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும் என்பதால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
நேற்றுமுன்தினமும், நேற்றும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி கோவில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருநது மூலவர் ஆதிபுரீஸ்வரரை வழிபட்டனர்.நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை தனது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து வழிபட்டார்.
இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட நடிகர் லாரன்ஸ், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜிகனேசன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 50ஆயிரம் பேர் தரிசித்து உள்ளனர்.
இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் வடிவுடையம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு உள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- அலட்சிய பேச்சு `ஆடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தாலும், இரவு நேரங்களில் புழுக்கத்தினாலும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் வீடுகளில் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து மின்தேவை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்து வருகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவொற்றியூர் தேரடி வடக்கு மாட வீதி, காலடிப்பேட்டை எழுத்துகாரன் தெரு, ரெயில் நிலையம் சாலை பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டது.
இதனால் நீண்ட நேரம் வரை மின் வினியோகம் சீராகாததால் குழந்தைகள், வயதானவர்கள் தூங்க முடியாமல் புழுக்கத்தால் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் விட்டு, விட்டு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்காக மின்வாரிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது எடுக்கப்படவில்லை.
மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்ட செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அதே பகுதி வடக்கு மாட வீதியைச் சேர்ந்த ஒருவர் மின் ஊழியர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அப்போது அவர், இதற்கு நாங்கள் என்ன பண்ண முடியும். ஆட்கள் யாரும் இல்லை என்று அலட்சியமாக பதில் கூறினார். மின் ஊழியரின் இந்த அலட்சிய பேச்சு `ஆடியோ' தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையே இரவு 12 மணிக்கு மேல் திருவொற்றியூர் பகுதியில் மின்சாரம் வினியோகம் சரியானது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- தெருவிளக்கு அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
திருவொற்றியூர்:
மணலி அருகே உள்ள சடையங்குப்பம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் வடக்கே கொசஸ்தலை ஆற்றின் உபரிக்கால்வாய், தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பக்கிங்காம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என சுற்றியும் நீர் நிலைகள் சூழ்ந்துள்ளது.
பருவமழையின் போது புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் போது அந்த தண்ணீர் கால்வாய் வழியாக ஆமுல்லை வாயல், கொசப்பூர் சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்து வார ஆற்றில் கலக்கும்.
இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடும். இதனால் அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பது தொடர்ந்து நீடித்து வந்தது.
இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008-ம் ஆண்டு மறைந்த கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின் படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த பணி பல்வேறு காரணங்களால் நத்தை வேகத்தில் நடை பெற்றதால் பர்மா நகர் இருளர் காலனியில் வசிக்கும் மாணவ, மா ணவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள் ஆகியோர் பாலத்தை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பின்னர் இந்த மேம்பாலப்பணி வேகம் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற மேம்பாலம் பணி தற்போது 90 சதவீதம் முடிந்து உள்ளது.
ஆனால் மேம்பாலத்தில் தெரு விளக்குகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் இந்த பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மேம்பாலம் வழியாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மின்விளக்கு இல்லாததால் இருட்டான இந்த பகுதியை நோட்டமிட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே மேம்பாலத்தில் உடனடியாக தெருவிளக்குகள் பொருத்தி மேம்பாலத்தை முறையாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
- வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத் தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.
கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. இதேபோல் வாயு எங்கிருந்து கசிந்து வருகிறது, எந்த வகையானது என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. காலை முதல் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர்.
அப்போது பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கினர். மேலும் பலருக்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டது. வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அதே பகுதி எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவிகள் நலமாக உள்ளனர்.
இது பற்றி அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முருகன், போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிஸ், கிருஷ்ணராஜ் திருவொற்றி யூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிக்கட்டா தேஜா, மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பள்ளியை ஆய்வு செய்தனர்.
மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன் சிலர் டாக்டர் கே. கார்த்திக் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு எந்த வகையானது, எங்கிருந்து கசிகிறது என்பது தெரியாததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது. இதையடுத்து பள்ளிக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ஏற்கனவே பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கினர். ஆனால் இந்த வாயு கசிவு குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. வாயு எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.
இப்போது மீண்டும் பள்ளியை திறந்த போதும் வாயு கசிவால் மாணவிகள் மயங்கி உள்ளனர். வாயு கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் பள்ளியை திறக்க வேண்டும்.
இதுபற்றி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
- கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
- தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.
கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளியில் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கின்றனர், கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர். பள்ளி வகுப்பறையில் காற்று வசதி இல்லை. போதிய கட்டமைப்பு இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அடிக்கின்றனர். பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவதில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர்.
அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தி வருகிறது.
- தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
- பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.
கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.
தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தியது.
இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு செய்து இந்த வாரத்தின் இறுதியில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர்.
- 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள விக்டரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 25-ந் தேதியும், மீண்டும் கடந்த 4-ந்தேதியும் என 2 முறை ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் மாணவிகளுக்கு மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர். இதில் கடந்த 4-ந் தேதி மாணவிகளுக்கு இடைவேளை விட்டநேரத்தில் 10.40 மணி முதல் 10.50 மணிவரை ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது. இதனால் பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.
அதன் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ. இப்ராஹிம் தலைமையில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில் மாணவர்களின் பெற்றோருடன் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவத்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதால் உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய பத்தாம் வகுப்பு, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
- போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரெயில்வே கேட் உள்ளது. இந்தபாதை அடிக்கடி மூடப்பட்டதால் அவசர தேவைக்கு அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து அண்ணாமலை நகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டு இருப்பதை கண்டித்து அண்ணாமலை நகர் ரெயில்கே கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி பெருகி பலருக்கு காய்ச்சல் போன்ற சுகாதாரக் கேடு விளைவிக்கிறது.
- மழை நீர் வடிகால் பணிகளை தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பழைய எம்ஜிஆர் நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலைகள் பார்த்து வருகிறார்கள். இங்கு பிரதான சாலை அருகே கொசஸ்தலை வடிநிலத்திட்டத்தின் கீழ் ராட்சத மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மழைநீர் வடிகால் உயரமாக இருப்பதால் அந்தப் பகுதியை ஒட்டி உள்ள தெருக்களில் உள்ள குடியிருப்புகள் தாழ்வான நிலையில் இருந்து வருகிறது. இதனால் பழைய எம்.ஜி.ஆர். நகர், பெரியா நகர் பிரதான சாலையில் உள்ள இணைப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் அந்த தெருகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை நீர் வடிகாலின் இருபுறமும் குளம்போல் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டை பாலம் போடப்பட்டு அதன் மூலம் நடந்து செல்கிறார்கள்.
மேலும் பழைய எம்.ஜி.ஆர். நகர், 3-வது தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த கழிவு நீரில் தத்தளித்தபடியே பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து மக்களும் கழிவுநீரில் நடந்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மூக்கை மூடியபடியே நடந்து செல்கிறார்கள். அந்த கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி பெருகி பலருக்கு காய்ச்சல் போன்ற சுகாதாரக் கேடு விளைவிக்கிறது.
இது பற்றி பொதுமக்கள் தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவை நாங்களே அகற்றி வருகிறோம் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீர் வடிகால் பணிகளை தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி உள்ள தெருக்களில் உடனடியாக அகற்றி மழை நீர் வடிகால் பணி விரைவில் தொடங்கப்பட்டு முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ரகுமான்கான். இவரது மனைவி ஆஷிகா, மகன் ஆசிப்கான் (5).
ரகுமான்கான் காலடிப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் குளிர்பானம் வாங்கினார். அதை குடித்த சிறுவன் ஆசிப்கானுக்கு மயக்கம் ஏற்பட்டது.
குளிர்பானம் கசப்பு தன்மையுடன் இருப்பதாக தந்தையிடம் கூறினான். உடனே ரகுமான்கானும் அந்த குளிர்பானத்தை குடித்த துர்நாற்றம் வீசியது. இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
அப்போது குளிர்பான பாட்டிலை பார்த்தபோது அதன் உள்ளே பல்லி இறந்து கிடப்பது தெரிந்தது.
இதையடுத்து தந்தை- மகன் இருவரையும் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கபிலன் (வயது 14). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவர் கபிலன், நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வள்ளலார் நகரில் இருந்து மாதவரம் செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 56 டபிள்யூ) சென்றார். அவர், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பஸ் தட்டு தடுமாறி சென்றது. பெரியார் நகர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியபோது, ஒருபுறமாக சாய்ந்தபடியே சென்றது.
இதனால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர் கபிலன், சாலையோரம் இருந்த மின்சார பெட்டியில் மோதி பஸ்சுக்கு அடியில் விழுந்து விட்டார். அவர் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவர் கபிலன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறி, சாலையை சீரமைக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மீஞ்சூரை அடுத்த விச்சூரைச் சேர்ந்த விநாயகம் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #BusAccident #StudentDeath
திருவொற்றியூர்:
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மார்க்கெட் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுருக்கு பையில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை நடத்தி வருகிறார்.