search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father dizzy"

    திருவொற்றியூரில் பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்த தந்தை மற்றும் மகன் மயக்கம் அடைந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ரகுமான்கான். இவரது மனைவி ஆஷிகா, மகன் ஆசிப்கான் (5).

    ரகுமான்கான் காலடிப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் குளிர்பானம் வாங்கினார். அதை குடித்த சிறுவன் ஆசிப்கானுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    குளிர்பானம் கசப்பு தன்மையுடன் இருப்பதாக தந்தையிடம் கூறினான். உடனே ரகுமான்கானும் அந்த குளிர்பானத்தை குடித்த துர்நாற்றம் வீசியது. இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    அப்போது குளிர்பான பாட்டிலை பார்த்தபோது அதன் உள்ளே பல்லி இறந்து கிடப்பது தெரிந்தது.

    இதையடுத்து தந்தை- மகன் இருவரையும் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ×