search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
    X

    ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

    • வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும்

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் தங்கநாக கவசம் அணிந்த நிலையில் காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தை யொட்டிய 3 நாட்கள் மட்டும் மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு தங்க நாக கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பி ராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும் என்பதால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    நேற்றுமுன்தினமும், நேற்றும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி கோவில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருநது மூலவர் ஆதிபுரீஸ்வரரை வழிபட்டனர்.நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை தனது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து வழிபட்டார்.

    இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட நடிகர் லாரன்ஸ், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜிகனேசன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 50ஆயிரம் பேர் தரிசித்து உள்ளனர்.

    இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் வடிவுடையம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு உள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×