என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway tunnel work"

    • கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரெயில்வே கேட் உள்ளது. இந்தபாதை அடிக்கடி மூடப்பட்டதால் அவசர தேவைக்கு அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து அண்ணாமலை நகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டு இருப்பதை கண்டித்து அண்ணாமலை நகர் ரெயில்கே கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    ×