search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burns"

    • திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது.
    • கிரையோஜெனிக் தீக்காயங்களை ஏற்படுத்தும்.

    திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது. இது உடம்பில் ஏதாவது இடத்தில் பட்டால் உறைபனி அல்லது தீக்காயங்களை ஏற்படுத்தும். இந்த திரவ நைட்ரஜன் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பொருட்கள் உறைவதுக்கு பயன்படுத்துவது.

    நைட்ரஜன் ஆக்ஸைடு என்றால் என்ன? அதன் விளைவுகள்

    இந்த திரவ நைட்ரஜன் என்பது மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் ஆகும். இது ஒரு நிறமற்ற, வாசனையற்ற திரவ நிலையில் உள்ள நைட்ரஜன் திரவம் ஆகும்.

    இதன் டெம்பரேச்சர் மைனஸ் 190 டிகிரி செல்சியஸ். இதனுடைய முக்கியமான பயன்பாடு என்னவென்றால் ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளை படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் பதப்படுத்தி பாதுகாக்க முடியும். திரவ நிலையில் இருந்து வாயுவாக வெளிவரக்கூடியது. இது திரவ நிலையில் இருது வாயுவாக மாறும்போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    அதே நைட்ரஜன் வாயுக்கள் நம் உடலுக்குள் செல்லும் போது கடும் உடல் உபாதைகளை உண்டுபண்ணுகிறது. வயிற்றுவலி, மூச்சுத்திணறல் மற்றும் மரணம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த திரவ நைட்ரஜன் இன்ஸ்டண்ட்டாக எந்த பொருளையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் திரவ நைட்ரஜன் ஆவியாகும் போது காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கக்கூடியது. இதனால் தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    ஒரு லிட்டர் திரவ நைட்ரஜன் 700 லிட்டர் கியாஸ் வாயுவை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் திரவ நைட்ரஜனில் இருந்து வரும் நீராவி உடல் உள்ளுறுப்புகளுக்குள் சென்று திசுக்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடல் உறுப்புகளில் துளையை கூட ஏற்படுத்தக் கூடும். அந்த அளவிற்கு குளிர்ந்த உறைபனி தன்மையை உருவாக்கக் கூடியது.

    பெரும்பாலும் உணவுத்துறையில் ஐஸ்கிரீம் துறையில் மட்டுமே இந்த நைட்ரஜனை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒரு கேளிக்கையாக திரவ நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ ஸ்நாக் என்ற பேரில் கேக், பிஸ்கெட், சாக்லேட் ஆகிய உணவுப்பொருட்களில் இதனை ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஆபத்து தெரியாமலேயே மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த திரவ நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் போது அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தி மரணத்தை கொடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    உணவுவகைகளில் இந்த நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ பிஸ்கெட், நைட்ரோ கார்ன் போன்றவைகளில் பயன்படுத்துகின்றனர்.

     நிறைய பேர் இந்த திரவ நைட்ரஜனை ஒரு கொண்டாட்டத்தின் பேரில் கேளிக்கையாக சென்று சாப்பிட்டு வருகின்றனர். அப்படியே உணவினை சாப்பிடும் போது நைட்ரஜன் வாயு முழுவதும் உணவில் இருந்து வெளியேறிய பிறகு சாப்பிட்டால் ஆபத்து எதுவும் இல்லை.

    ஆனால் இந்த திரவ நைட்ரஜனை உணவில் கலந்து சாப்பிடும் போது அந்த வாயுக்கள் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறுவதை நாம் பார்த்திருப்போம். இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இந்த வாயுக்கள் நம் உடலில் எங்கெல்லாம் படுகிறதோ அந்த உறுப்புகள் எல்லாம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதனால் உறுப்புகள் சேதம் அடையும்.

    இந்த திரவ நைட்ரஜன் ஒரு துளி கண்களில் படும்போது கண்பார்வையை இழந்துவிடும் அபாயம் உண்டு. இதனால் நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு என்னவென்றால் எந்த அளவுக்கு நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடலின் உள் உறுப்புகளில் பாதிப்புகள் இருக்கும்.

    இந்த திரவ நைட்ரஜன் உணவுகளில் இவ்வளவு தீங்குகள் இருக்கிறது என்பதை அறியாமலேயே மக்கள் அதனை ஒரு கேளிக்கை பொருளாக நினைத்து சாப்பிட்டு வருகின்றனர். இனியாவது இந்த மாதிரி உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

    • சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன்.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 27-ந் தேதி சாதனா வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது அவரது பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலைமையில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்

    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காய்கறி வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை மேட்டுப்பாளையம் சிந்து வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52). இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காய்கறி வியாபாரத்துக்காக ஒரு காரை வாங்கி உபயோகித்து வந்தார். அந்த காரை  வேல்முருகன் தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி விட்டு தூங்க செல்வது வழக்கம் அதுபோல்  வேல்முருகன் காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

    நள்ளிரவு 11 மணியளவில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ கார் கண்ணாடியை உடைத்து இருக்ககையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வேல்முருகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் காரை தீ வைத்த எரித்து சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது வேல்முருகனின் மகன் சிவபிரியன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கு பயந்து வேல்முருகன் தனது மகன் சிவபிரியனை சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். ஆனாலும் ஆத்திரம் தீராத எதிர் தரப்பினர் காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து காருக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×