search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை"

    • முசிறியில் வேளாண்மை பயிற்சி பெறும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
    • முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.

    முசிறி:

    முசிறி வடுகப்பட்டியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளங்கலை வேளாண் மாணவி யோகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

    . நிகழ்ச்சியில் முசிறி வேளாண் அலுவலர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன், இணை பேராசிரியர் குணா, உதவி பேராசிரியர் கனகராஜ், உதவி பேராசிரியர் சீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 75 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் முசிறி வட்டாரத்தில் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.முடிவில் இளங்கலை வேளாண் மாணவி நந்திதா நன்றி கூறினார்.


    • பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை

    தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

    இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.

    • கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.
    • மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகளின்அனுபவங்களை கேட்டறிந்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே கோபுர ராஜகோபுரம் கிராமம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தஞ்சை ஆர். வி.எஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் 11 மாணவ மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சூரிய பிரியா, பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

    நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகள் குறித்தும், அனுப வங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் பாரதிராஜா, திவ்யா, ரம்யா, ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செயல்பட்டனர்.

    ஏற்பாடு களை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஜெனோ அபிஷா, கன்னிகா லாவண்யா, ஜெயதாரணி கிருத்திகா, லட்சுமி ஸ்ரீ உள்பட கலந்து கொண்டனர்.

    • மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
    • பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கட்டிமேடு ஊராட்சி இணைந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் பெறுவது எவ்வாறு என விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் விழிப்புணர்வு நடைப்பயணம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி இரவிச்சந்திரன் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைசாமி கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் ரவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உழவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    வேளாண்மை உதவி பொறியாளர் கௌசல்யா பேசும்போது,கிராம அளவில் வேளாண்மை வாடகை இயந்திரங்கள் வாடகை சேவை மையங்களில் மானியத்தில், அமைப்பது வேளாண்மை இயந்திரங்கள் வாடகை முன் பதிவிற்கு இ-வாடகைக்கு திட்டம் அமைப்பது பற்றி விரிவாக பேசினார் .

    உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் வீட்டில் பின்புறம், மாடித்தோட்டம் பழ வகை மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் வேளாண்மை உதவி ஆலுவலர்கள் ரமேஷ், சுவாமிநாதன் மற்றும் விவசாயி சங்க தலைவர் அப்துல் ரஹ்மான் செயலர் செந்தில்குமார், தீவிர விவசாயிகள் முகமது மஸ்கின், ஹலீல் ரஹ்மான்,அப்துல் சலீம் ,அப்துல் சலாம் , அப்துல் முனாப் ஆசிரியர் சாகுல் ஹமீது கல்வியாளர் ரவிச்சந்திரன் , தண்டபாணி ஊராட்சி உறுப்பினர்கள் இளம் விவசாயி பகுருதீன் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் உழவு மெசின், பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் விழிப்புணர்வு பிரச்சார நடைபெறும் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் செயலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.

    • மதுரை அருகே கூட்டுறவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது.

    பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் வரவேற்றார்.

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜீவா, கூட்டுறவுச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்துரைத்தார். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தர்மராஜ் கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    மதுரை கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    • சிங்கம்புணரியில் வேளாண்மை விற்பனை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை, நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார். நேரடி கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படும் விதம், மக்களின் ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை மாவட்டத்தின் முதல் தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் எண்ணெய் உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்படும் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மேலாண் வணிகம்) சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண்மை அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர்கள் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், தி.மு.க. நகர தலைவர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரத்னகாந்தி செய்திருந்தார்.

    • 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
    • வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.

    ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

    • விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என விவாதிக்கப்பட்டது,

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையில்இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழுகூட்டம் திருப்பனந்தாள் வேளாண்மை அலுவல கத்தில் நடைப்பெற்றது.

    இக்கூட்டத்தில் வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்கநர் விஜயாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் சிவா சுப்பரமணியம் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பி னர்கள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்க ப்பட்ட மாவட்டத்திற்க்குள் விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகளுக்கான கண்டூணர்வு சுற்றுலா மற்றும் பாரம்பரியம் நெல் சாகுபடி, தீவனபுல் மேலாண்மை, செயல்விளக்கம் அமைத்தல் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் மேற்கண்ட திட்டங்கள் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களின் செயல்படுத்தப்படும் என்பதை குறித்து விவாதி க்கப்பட்டது.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றியுரை கூறினார்.

    இக்கூ ட்டத்திற்கு ராஜா,கோகிலா மற்றும் சந்தியா ஏற்பாடு செய்திருந்தனர்.

    • அங்கக வேளாண்மையில் முற்றிலுமாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது.
    • வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களை எடுத்து கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டா ரம், இரண்டாம்புளிக்காடு கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி நாகராஜன். முன்னிலை வகித்தார்.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, "செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்" என்றார்.

    அங்ககப் பண்ணைய சாகுபடியாளர் ஆர்.கமலக்க ண்ணன் பேசுகையில், "விவசாயிகள் அனைவரும் மண்ணின் அங்ககத் தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல், நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல், உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்ககப் பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னை அடையப் பெறுகிறது.

    அங்கக வேளாண்மையை பின்பற்று பவர்கள் உற்பத்தியின் தரத்தையும், அளவையும் அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    அம்முயற்சி பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்" என்றார்.

    அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சுரேஷ், பேசுகையில் அங்கக வேளாண்மை பாரம்பரிய வேளாண்மையிலிருந்த அடிப்படையிலேயே பல மாற்றங்களை கொண்டது.

    அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல்படுவதால் இயற்கை சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது.

    அங்கக வேளாண்மையில் முற்றிலு மாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது" என்றார்.

    அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ.தமிழழகன் பேசுகையில், அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களையும் எடுத்துக் கூறினார்.

    ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரத்தினம், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
    • நாமக்கல் வட்டார வேணாண் அதிகாரி இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்ப டுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயி கள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி / நோய்களை கட்டுப்ப டுத்தலாம்.வேம்பின் அனைத்து பாகங்களும் வேளாண்மைக்கு பயன்படுகிறது.

    தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியாவின் பயனை அதிகரிக்க வேப்பெண்ணைய்யை கலந்து பயன்படுத்தலாம். வேப்பெண்ணைய்யை தனியாகவும் இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சிநாசினியாக பயன்படுத்தலாம்.

    வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்துவிடும். வேப்பிலைகளை நெல்/சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து அந்துப்பூச்சி, தானிய துளைப்பான்கள், வண்டுகள் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

    வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான் இலைசுருட்டுப் புழு, ஆணைகொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சிக ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பயிர்களை தாக்கும் சாம்பல்நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலிய வைகளை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.

    வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு + 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவுகின்றது. தழைச்சத்து வீணாவதும் குறைகின்றது.

    நொச்சி, வேம்பு, தழை கரைசல் நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சியினை கட்டுப்படுத்தும். வேம்பில் அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி/நோய் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படு கின்றது எனவே, எந்த வித பாதிப்பின்றி சிக்கனமாக வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி தாங்கள் பயிரிடும் விளைபொருட்களையும் பூச்சி நோய்களின்றி எளிதாக காப்பற்றலாம் என்று நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி கூறியுள்ளார்.

    • வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    மூலனூர் :

    மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மூலனூர் வட்டாரத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளில் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைகளுக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மூலனூர் எடைக்கல்பாடி மற்றும் தூரம்பாடி வருவாய் கிராமங்களுக்கு சசிகுமார், கிளாங்குன்டல், குமாரபாளையம் கிராமங்களுக்கு தேசிங்கு, பொன்னிவாடி, பெரமியம், வெள்ளவாவிபுதூர் வருவாய் கிராமங்களுக்கு பாலசுப்பிரமணி, கன்னிவாடி, எரசினம் பாளையம், முளையாம்பூண்டி ,சேனாபதி பாளையம், தட்டாரவலசு வருவாய் கிராமங்களுக்கு வெங்கடேஷ், அரிக்கரன் வலசு, நஞ்சை தலையூர் ,புஞ்சை தலையூர் வருவாய் கிராமங்களுக்கு குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காளிபாளையம் வருவாய் கிராமத்திற்கு செல்வராஜ், சின்னமருதூர் வருவாய் கிராமத்திற்கு அப்துல் ஜலீல் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உர விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும் மற்றும் அதிக விலைக்கு உர விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப் பதுக்கல், வேளாண்மை இல்லாத பிற பயன்பாடுகளுக்கு (தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக) உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதற்காக பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லோகநாதன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை உதவி இயக்குநர், தமிழ்செல்வன் ஆகியோர் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும்படை அதிகாரிகள் பரமத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதிமீறல்க ளில் ஈடுப்பட்ட உரக்கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களுக்கு வேளாண் பயன்பாட்டிற்கான உரத்தினை வழங்கிய உரக்கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

    ×