search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டுகள் தாக்குதல்"

    • தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
    • நாமக்கல் வட்டார வேணாண் அதிகாரி இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்ப டுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயி கள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி / நோய்களை கட்டுப்ப டுத்தலாம்.வேம்பின் அனைத்து பாகங்களும் வேளாண்மைக்கு பயன்படுகிறது.

    தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியாவின் பயனை அதிகரிக்க வேப்பெண்ணைய்யை கலந்து பயன்படுத்தலாம். வேப்பெண்ணைய்யை தனியாகவும் இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சிநாசினியாக பயன்படுத்தலாம்.

    வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்துவிடும். வேப்பிலைகளை நெல்/சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து அந்துப்பூச்சி, தானிய துளைப்பான்கள், வண்டுகள் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

    வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான் இலைசுருட்டுப் புழு, ஆணைகொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சிக ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பயிர்களை தாக்கும் சாம்பல்நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலிய வைகளை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.

    வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு + 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவுகின்றது. தழைச்சத்து வீணாவதும் குறைகின்றது.

    நொச்சி, வேம்பு, தழை கரைசல் நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சியினை கட்டுப்படுத்தும். வேம்பில் அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி/நோய் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படு கின்றது எனவே, எந்த வித பாதிப்பின்றி சிக்கனமாக வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி தாங்கள் பயிரிடும் விளைபொருட்களையும் பூச்சி நோய்களின்றி எளிதாக காப்பற்றலாம் என்று நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி கூறியுள்ளார்.

    ×