search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistant director"

    • தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ( பொ ) புவனேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள்,பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

    மேலும் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை தமிழில் கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தத்தப்பட்டு உள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
    • கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட, கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவா் வள்ளல். இவரை, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழக கனிமவளத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவிக்க கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    இதைத்தொடா்ந்து மீண்டும் திருப்பூா் மாவட்ட உதவி இயக்குநராக வள்ளல் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல், சென்னை கிண்டி கனிமவளத்துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக கனிம வளத் துறை உதவி இயக்குநராக சச்சின் ஆனந்த் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

    • வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    மூலனூர் :

    மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மூலனூர் வட்டாரத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளில் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைகளுக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மூலனூர் எடைக்கல்பாடி மற்றும் தூரம்பாடி வருவாய் கிராமங்களுக்கு சசிகுமார், கிளாங்குன்டல், குமாரபாளையம் கிராமங்களுக்கு தேசிங்கு, பொன்னிவாடி, பெரமியம், வெள்ளவாவிபுதூர் வருவாய் கிராமங்களுக்கு பாலசுப்பிரமணி, கன்னிவாடி, எரசினம் பாளையம், முளையாம்பூண்டி ,சேனாபதி பாளையம், தட்டாரவலசு வருவாய் கிராமங்களுக்கு வெங்கடேஷ், அரிக்கரன் வலசு, நஞ்சை தலையூர் ,புஞ்சை தலையூர் வருவாய் கிராமங்களுக்கு குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காளிபாளையம் வருவாய் கிராமத்திற்கு செல்வராஜ், சின்னமருதூர் வருவாய் கிராமத்திற்கு அப்துல் ஜலீல் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
    • சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

    வெள்ளகோவில் : 

    முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி மற்றும் நத்தக்கடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம் கிராம பகுதிகளில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து பயிறு, ஆதார நிலை 2 உள்ள பயறு வகைகளை சாகுபடி செய்து விதைப்பண்ணைகளாக அமைத்து உள்ளனர்.

    முத்தூர் பகுதிகளான மங்களப்பட்டி, வேலம்பாளையம், ஊடையம் மற்றும் நத்தக்காடையூர் பகுதிகளான குட்டப்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளின் பயிறு வகை விதைப்பண்ணைகளுக்கு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் பி.அ.மாரிமுத்து நேரில் வந்து ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

    பயிறு வகை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணைகள், வயல் தர நிலைகளில் தேர்ச்சி பெற்ற நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். நன்கு தேர்ச்சி பெற்ற பயிறுவகை விதை குவியல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் வழங்கி விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். விதைசுத்திகரிப்பு நிலையங்களில் விதைச்சான்று அலுவலர்களால் பயிறு வகை மாதிரி சேகரிக்கப்பட்டு, நல்ல தரமான விதை குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதை குவியல்களாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது காங்கயம் வட்ட விதை சான்று அலுவலர் ஸ்ரீ காயத்ரி, உதவி நிலை அலுவலர் கிருபானந்தன் மற்றும் சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தவறான நடத்தையை கைவிடாததால் தனது மனைவியை கொன்றதாக உதவி இயக்குனர் வாக்குமூலம் அளித்துள்ளார். #BodyPartsInDumbyard #WomanKilled
    கைதான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா ஆசை அதிகமாக இருந்தது. இதனால் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தேன். சந்தியாவை திருமணம் செய்த பிறகு 2 குழந்தைகள் பிறந்தன.

    மகன், மகள் இருவரும் தூத்துக்குடியில் எனது பெற்றோரின் அரவணைப்பில் படித்து வருகிறார்கள்.

    சென்னை வந்து ஜாபர்கான்பேட்டையில் நான் வசித்து வந்தேன். என்னுடன் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்ற சந்தியா சென்னையில் தங்கியிருந்து வெளியில் ஊர் சுற்றுவதாக கேள்விப்பட்டேன். இதற்காக அவளை அழைத்து கண்டித்தேன். சினிமா தொடர்பு காரணமாக சந்தியாவின் நடத்தை மாறியது. அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் பலமுறை எச்சரித்தேன். இருப்பினும் சந்தியா நான் சொல்வதை கேட்கவில்லை. இஷ்டப்படி வெளியில் செல்வது, எப்போதும் போனில் பேசுவது என இருந்தார்.

    இதனை கண்டிக்கும் நேரங்களில் எல்லாம் என்னுடன் சண்டை போட்டார். விவாகரத்து செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக எனக்கும் சந்தியாவுக்கும் பிரச்சினை வெடித்தது. இருவரும் வீட்டுக்குள்ளேயே கடுமையாக சண்டை போட்டோம். அப்போது சந்தியா என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்.

    நான் சொல்கிறபடி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கூறினேன். ஆனால் சந்தியாவோ எனது விருப்பப்படிதான் வாழ்வேன் என்று கூறினார். இதன் காரணமாக எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

    இதனால் சந்தியாவை கொலை செய்து அவள் உடலை 4 துண்டுகளாக துண்டித்தேன். ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக வெட்டி எடுத்து பார்சல் போட்டேன். இடுப்புக்கு கீழே முழங்கால் வரையில் தனியாக துண்டித்து இன்னொரு பார்சல் போட்டேன்.

    கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பாகத்தையும், இடது கையையும் மற்றொரு பார்சலாக கட்டினேன். இரண்டு கால்களையும், வலது கையையும் தனியாக பார்சல் போட்டேன்.

    19-ந்தேதி கொலை செய்து விட்டு ஒருநாள் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருந்தேன். அதன் பிறகு மறுநாளே கத்தியால் உடலை துண்டித்தேன்.

    கொலையில் இருந்து தப்பிப்பதற்காக 20-ந்தேதி இரவில் உடல் பாகங்களை தனித்தனியாக வீசினேன்.

    அனைத்தையும் வெளியில் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு சென்று 2 கால்கள், ஒரு கையை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினேன். அதுதான் பெருங்குடியில் போலீசிடம் சிக்கி கொண்டது.

    உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி வீசியதால் போலீசாரால் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். எப்போதும் போல எனது பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #BodyPartsInDumbyard #WomanKilled
    திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்தவர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து. இவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மீது மாவட்ட அளவில் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதும் பின்னர் அவர்களை அதே இடத்தில் பணிஅமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் இயக்குனர் நிலையிலான அதிகாரிகள் அவரிடம் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இணை இயக்குனர் வேதமுத்து மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கோபால் உத்தரவின் பேரில் இணை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து ஓய்வு பெறும் நாளான நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    மேலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவர் முத்துசாமி பாண்டியன், கால்நடை ஆய்வாளர் பாலசந்திரன், ஆகியோர் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×