search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
    X

    விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

    • விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என விவாதிக்கப்பட்டது,

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையில்இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழுகூட்டம் திருப்பனந்தாள் வேளாண்மை அலுவல கத்தில் நடைப்பெற்றது.

    இக்கூட்டத்தில் வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்கநர் விஜயாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் சிவா சுப்பரமணியம் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பி னர்கள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்க ப்பட்ட மாவட்டத்திற்க்குள் விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகளுக்கான கண்டூணர்வு சுற்றுலா மற்றும் பாரம்பரியம் நெல் சாகுபடி, தீவனபுல் மேலாண்மை, செயல்விளக்கம் அமைத்தல் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் மேற்கண்ட திட்டங்கள் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களின் செயல்படுத்தப்படும் என்பதை குறித்து விவாதி க்கப்பட்டது.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றியுரை கூறினார்.

    இக்கூ ட்டத்திற்கு ராஜா,கோகிலா மற்றும் சந்தியா ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×