search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint Director"

    • வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் உத்தரவின்படி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உர விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும் மற்றும் அதிக விலைக்கு உர விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப் பதுக்கல், வேளாண்மை இல்லாத பிற பயன்பாடுகளுக்கு (தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக) உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதற்காக பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லோகநாதன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை உதவி இயக்குநர், தமிழ்செல்வன் ஆகியோர் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும்படை அதிகாரிகள் பரமத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள், மொத்த விற்பனை சில்லரை விற்பனை ஆகிய கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதிமீறல்க ளில் ஈடுப்பட்ட உரக்கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களுக்கு வேளாண் பயன்பாட்டிற்கான உரத்தினை வழங்கிய உரக்கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

    • தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குபல்லடம், பொங்கலூர்,சுல்தான்பேட்டை,செஞ்சேரிமலை,ஜல்லிபட்டி,செஞ்சேரிப்புத்தூர்,வேலம்பாளையம்,காமநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் நோயாளிகள் குளியலறை மற்றும் சுகாதார வளாகத்தில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. குடிப்பதற்கு குடிநீரும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.

    ×