search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்"

    • ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
    • அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி “விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    சேலம்:

    ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் சுபிக்க்ஷா, சுருமி சுபையர், சுஷ்மிதா, சுவாதி, தாமரை தர்ஷணா, வானதி, வினிதா, விஷ்ணுபிரியா, யமுனா தேவி ஆகியோர் "விவசாயத்தில் மகளிரின் முக்கியத்துவம்"குறித்து இருப்பாளி கிராமத்தில் கூட்டம் அமைத்து பெண்க–ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாணவி வினிதா "விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி "விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு" குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மனோகர் மற்றும் இந்துமதி செய்தனர்.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.36 குவிண்டால் எடை கொண்ட 7,870 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.39-க்கும், சராசரி விலையாக ரூ.25.75-க்கும் என மொத்தம் ரூ.71ஆயிரத்து 113-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 219.07 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.12-க்கும், சராசரி விலையாக ரூ.81.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் என மொத்தம் ரூ.16லட்சத்து 67ஆயிரத்து 20-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    • வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சகோ தர துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, கள ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி, வெண்ணந்தூர் வட்டாரம், தொட்டியவலசு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்க

    ளில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க

    திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள மகாகனி, தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோ ளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

    நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி

    திட்டத்தின் கீழ், ஊனாந்தாங்கல் கிராம

    பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்தார்.

    விளை பொருட்களை தேசிய மின்னணு சந்தை மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சத்திரம் வட்டாரம் நவணி கிராமத்தில் "இ"-

    வாடகை செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடத்தில் கலந்து ரையாடல் நடைபெற்றது.

    ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் நாசர், வேளாண்மை துணைஇயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 28.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 8,616 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.25.89-க்கும் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 904-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 107.66 1/2 குவிண்டால் எடை கொண்ட 235 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.81.36-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.71-க்கும், சராசரி விலையாக ரூ.71.16-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 41-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது. 

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.63 1/2குவிண்டால் எடை கொண்ட 5 ஆயிரத்து924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.59-க்கும், சராசரி விலையாக ரூ.26.25-க்கும் என மொத்தம் ரூ.51ஆயிரத்து 441-க்கு விற்பனையானது.

    அதேபோல் 182.59 குவிண்டால் எடை கொண்ட 375-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.887.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.89-க்கும், சராசரி விலையாக ரூ.86.89-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.05-க்கும், சராசரி விலையாக ரூ.75.55-க்கும் என மொத்தம் ரூ.14லட்சத்து 69ஆயிரத்து 136-க்கு விற்பனையானது.

    அதேபோல் 3.10 குவிண்டால் எடை கொண்ட 4 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 132.69 -க்கும், குறைந்த விலையாக 110-க்கும் , சராசரி விலையாக ரூ116.19-க்கும் என ரூ39 ஆயிரத்து 185- க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 22.45 குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து 103 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 107.32 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.69-க்கும், சராசரி விலையாக ரூ.88.36-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.99-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 495-க்கு விற்பனையானது.

    அதேபோல் 21.36 குவின்டால் எடை கொண்ட 29 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.136.19-க்கும், குறைந்த விலையாக ரூ.110.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.39-க்கும் என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது.

    12.69 1/2 குவிண்டால் எடை கொண்ட 39 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.75.60-க்கும், குறைந்த விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என ரூ. 94 ஆயிரத்து 708-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    எள்

    மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    • ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயத்தில் வேலையாட்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உழுவை எந்திரம் ரோட்டாவேட்டர், பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, பல்வகை கதிர் பயிர் அடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் மற்றும் இதர எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை எங்களது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரி உபகோட்டங்களில் சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்–கொள்ள கேட்டுக்–கொள்ளப்ப–டுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி–ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும். இதில் சிறு, குறு மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை உள்ளிட்டவற்றில் எது குறைவோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் கணக்கிட்டு தனியே வழங்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் _லம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் வேளாண் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • நாமக்கல்‌ மாவட்டம்‌ சேலம்‌ சாலையில்‌ அமைந்துள்ள எல்.எம்.ஆர். காம்ப்ளக்ஸ்‌ முதல்‌ தளத்தில்‌ அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது.
    • விழாவில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார்‌ எம்.பி. கலந்துகொண்டு மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும்‌ ஊரகவளர்ச்சி வங்கி சென்னையை தலைமை இடமாக கொண்டு மாநிலம்‌ முழுதும்‌ 19-மண்டல அலுவலகங்கள்‌ 6 நகைக்‌ கடன்‌ சேவை மையங்களுடன் செயல்பட்டுவருகிறது.

    கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ சண்முகசுந்தர அனுமதியுடன்‌ இதன் 20-வது மண்டல அலுவலகம்‌ நாமக்கல்‌ மாவட்டம்‌ சேலம்‌ சாலையில்‌ அமைந்துள்ள எல்.எம்.ஆர். காம்ப்ளக்ஸ்‌ முதல்‌ தளத்தில்‌ அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார்‌ எம்.பி. கலந்துகொண்டு மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகம்‌ சேலம்‌ மண்டலத்தில்‌ செயல்பட்டு வந்த நிலையில்‌ தற்போது நாமக்கல்‌ மாவட்டத்திலுள்ள 7 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி வங்கிகள்‌ மற்றும்‌ கரூர்‌ வட்டத்திலுள்ள 3. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி வங்கிகளை இணைத்து புதியதாக நாமக்கல்லில்‌ தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாமக்கல்‌ மாவட்ட பொது மக்களுக்கு கூடுதலாகவும்‌ விரைவாகவும்‌ வங்கிச்சேவை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள–தாகவும்‌ விரைவில்‌ விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில்‌ பண்ணை சார்ந்த கடன்கள்‌, கால்நடை வளர்ப்பு கடன்கள்‌, டிராக்டர்‌ கடன்கள்‌ உள்ளிட்ட கடன்கள்‌ வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்தார்‌.

    இவ்வங்கியில்‌ நகைகடன்‌ மற்றும்‌ இட்டுவைப்புக்‌ கடன்கள்‌ வழங்கப்பட்டுவருகிறது. இட்டுவைப்புகளுக்கு 6.75 சதவீதம் முதல்‌ 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டுவருகிறது.

    விழாவில்‌ நாமக்கல்‌ எம்.எல்.ஏ. ராமலிங்கம், கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ செல்வக்குமரன், நாமக்கல்‌ நகர்‌ மன்றத்‌ தலைவர்‌ கலாநிதி, துணைப்பதிவாளர்கள் கர்ணன் மற்றும்‌ கே.ஆர்‌.ஏ. விஜயகணபதி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், வங்கியின் துணைப் பொதுமேலாளர், மண்டல மேலாளர் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின.
    • நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

    வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் வணிகம், விற்பனைத்துறையின் வேளாண்மை துணை இயக்குநர் நாசர், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர், நவலடி, மோகனூர் வட்டார ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன் ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும் அதன் வாயிலாக கிடைக்கபெறும் நஞ்சில்லா உணவு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜு, ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருட்செந்தில், புதுக்கோட்டை இயற்கை வேளாண் விஞ்ஞானி சின்னையா நடேசன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ஸ்ரீபாலாஜி, செங்கோ இயற்கை வேளாண்மை பண்ணை விவசாயி நல்லசிவம், கரூர் ஜெயகவின் இயற்கை வேளாண் பண்ணை விவசாயி மனோகரன் ஆகியோர் பேசினார்கள்.

    திருச்செங்கோடு நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் சிறப்பு மண் மற்றும் நீர் ஆய்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விவசாயிகளுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை நாமக்கல் உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குநர் நாச்சிமுத்து, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினர். 

    ×