search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் பொருட்கள் ரூ.24.34 லட்சத்துக்கு விற்பனை
    X

    வேளாண் பொருட்கள் ரூ.24.34 லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    எள்

    மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    Next Story
    ×