search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரங்கள்"

    • சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக சாலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீக் கடைகள், ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு
    • மேலூர் விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் எந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில வேளாண்எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவை சேர்ந்த 27 விவசாயிகளுக்கு ரூ.19.93 லட்சம் மானியத்தில் 21 பவர் டில்லர்கள், 6 விசைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக குன்னூர் இளித்தொரையில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 3 பேருக்கு விளை களையெடுப்பான் கருவிகளை வழங்கினார்.

    தமிழக அரசிடம் மானிய விலையில் பவர் டில்லர் பெற்ற சுள்ளிக்கூடு விவசாயி கோபால் என்பவர் கூறுகையில், எனக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 நாட்கள் செய்யும் வேலையை 3-4 மணி நேரத்தில் முடித்து விடலாம். இது எனக்கு வேளாண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

    சாந்தி கூறுகையில் இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நானும் என்னை போன்ற விவசாயிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

    • ரூ.24 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மற்றும் விசைகளை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார்.

    முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு 13 பயனாளி களுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக குறு, சிறு விவசாயிகளுக்கு 75 சதவீதம் முதல் 100சதவீதம் வரை மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை மையம் மூலம் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சோலார் மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான திட்டங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிங்களில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வங்கிகள் வழியாக வழங்கும் பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண்மை துறை இணை எக்குநர் (பொறுப்பு) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு உள்ளே கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

    அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

    முன்னதாக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழி காட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள எலக்ட்ரா னிக் வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவல கத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப் பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை வாக்குபதிவு எந்திரங்கள் 1366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் எம்-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி கள் 3 என மொத்தம் 1,998 வாக்குபதிவு எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை யில் திறக்கப்பட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் இந்த எந்தி ரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்.டி.ஓ (பொறுப்பு) சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் மெகா எந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி இலஞ்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    கலெக்டர்

    இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலை குமார் மற்றும் சோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் பவுண்டரான ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கண்காட்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, நகராட்சி சேர்மன் சாதிர், துணை சேர்மன் கே.என்.எல். சுப்பையா, இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னதாய் மற்றும் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மாரியம்மாள், ஏ.டி., எம்.எஸ்.எம்.இ. தலைவர் சீமியோன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இசக்கிமுத்து, பி.எம். சிட்கோ நிறுவனத்தின் தலைவர் சத்யராஜ், ஆரம் டிக் நிறுவனத்தின் தலைவர் முருகேசன், ஏ.டி. திறன் மேம்பாட்டு மையம் தலைவர் ஜார்ஜ் பிராங்கிளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைமை கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஜே.பி. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரும், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளருமான அய்யப்பன், செந்தில் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.
    • இது எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உட்பட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளிலும் 1,880 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    6 தொகுதிகளில் உள்ளடக்கி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த நிலையில், வருகிற 2024-ம் அண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக நேற்று பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 900 வி.வி.பேட் (வாக்களித்ததை காட்டும் எந்திரம்) போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

    இந்த எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.

    இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:-

    மின்னணு எந்திரங்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில், ஏற்கனவே 2,118 கண்ட்ரோல் யூனிட், 3,606 பேல்ட் யூனிட், 1,706 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளன. தற்போது, பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து, 900 வி.வி.பேட் எந்திரங்கள் வரப்பெற்றுள்ளது. இது எதிர்வரும் 2024&ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி,தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டனி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
    • 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் இடைத்தேர்தலை யொட்டி கிழக்கு தொகுதி க்குட்பட்ட 238 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

    இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு மான கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரி க்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இணைய தளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்தி ரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர்கள் தங்கள் அளித்தவாக்கினை சரிபார்க்கும் 310 எந்திரங்கள் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாக வும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மாநக ராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 77 பேர் கொண்ட இறு திவேட்பாளர் பட்டியல் வெளியிட ப்பட்டதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியிலும் தேவைப்படுகின்றன.

    எனவே கூடுதலாக 1100 வாக்குபதிவு எந்திர ங்கள் ஒதுக்கப்பட்டு கூடுதல் எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    தொடர்ந்து கூடுதல் வாக்குபதிவு எந்திரங்கள் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயத்தில் வேலையாட்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உழுவை எந்திரம் ரோட்டாவேட்டர், பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, பல்வகை கதிர் பயிர் அடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் மற்றும் இதர எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை எங்களது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரி உபகோட்டங்களில் சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்–கொள்ள கேட்டுக்–கொள்ளப்ப–டுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி–ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும். இதில் சிறு, குறு மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை உள்ளிட்டவற்றில் எது குறைவோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் கணக்கிட்டு தனியே வழங்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் _லம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் வேளாண் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்‌.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
    • ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.

    அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.

    டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆய்வுக்குப் பிறகு தகவல்
    • 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் குமரி மாவட்ட த்தில் திங்கள்நகர் மற்றும் தோவாளை தாலுகா அலுவலகங்களில் பாது காப்பாக பூட்டி சீல் வைக்க ப்பட்டுள்ளன.

    தற்போது 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுது ஏற்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை சரி செய்யும் வகையில் பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களாக திங்கள்நகரில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அதில் குறைபாடு உள்ள எந்திரங்களை தனியாக பிரித்து வைத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து இன்று தோவாளையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடை பெற்றது. தேர்தல் தாசில்தார் சுசிலா முன்னிலையில் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 7270 மின்னணு எந்திரங்களில் 67 மின்னணுஎந்திரங்கள் பழுது ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை அதிகாரிகள் தனியாக வைத்துள்ளனர். இதேபோல் 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

    மேலும் 4789 வி.வி.பேட் எந்திரத்தில் 3451 எந்திரங்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த எந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவன த்துக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×