search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  வேளாண் பொருட்கள் ரூ.17.38 லட்சத்துக்கு ஏலம்
    X

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.17.38 லட்சத்துக்கு ஏலம்

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.36 குவிண்டால் எடை கொண்ட 7,870 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.39-க்கும், சராசரி விலையாக ரூ.25.75-க்கும் என மொத்தம் ரூ.71ஆயிரத்து 113-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 219.07 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.12-க்கும், சராசரி விலையாக ரூ.81.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் என மொத்தம் ரூ.16லட்சத்து 67ஆயிரத்து 20-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    Next Story
    ×