search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவிகள்"

    • மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.
    • ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    தஞ்சாவூர்:

    நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

    இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும்.

    மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.

    ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் வழங்கியதாக பேட்டி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், இளித்தொரை கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவா் டில்லா், பவா் வீடா்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) கீா்த்தி பிரியதா்சினி முன்னிலை வகித்தாா். குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக விவசாயத் துறைக்காக தனி பட்ஜெட் அறிவித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

    விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றால் எந்திரங்கள் பயன்பாடு அவசியம். எனவே தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் ஆகியவை ரூ.41.23 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு, விசை களையெடுப்பான் கருவிகள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன. குன்னூா் வட்டத்தில், 8 விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள், 3 பேருக்கு பவா் வீடா்கள் என மொத்தம் ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவ சாயிகள் பெற்று பயன் பெறலாம். உழவுப்பணி கள் மற்றும் அறுவடைப் பணிக ளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகளுடன் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப் படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம், அதிக பட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    நன்செய் நிலம் வைத்து உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி கள் வாடகைக்கு தேவைப் படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இளை யான்குடி, காளையார் கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளரையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் காரைக்குடி உதவி செயற் பொறி யாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
    • மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிறு வகை திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில் நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல் கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி காங்கயம் வட்டாரம் படியூர் கிராமத்தில் சிவகுமார் மற்றும் வீரணம்பாளையம் கிராமத்தில் செல்லமுத்து ஆகியோருக்கு சுழல் கலப்பை மானிய விலையில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டது.

    இந்த வேளாண் பண்ணை கருவிகளை திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை அலுவலர் ரேவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், சீனிவாசன், ஜோதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடையே பண்ணை கருவிகளின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

    • பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர்.
    • கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் நோய்கள் தாக்கி தேயிலை செடிகள் கருகி உற்பத்தி குறைந்து காணப்பட்டு வருகிறது.

    தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட ப்பட்டு உள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தேயிலை செடிகளை காப்பதற்க்கு செடிகளுக்கு மேல் பாகங்களை வெட்டி போடுதல் மற்றும் தேயிலை செடிகளின் தலைகளை பரப்பி விடுதல் என பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில் பெரும்பா ன்மையான விவசாயிகள் ஸ்பிரிங்ளர் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் மூலமாக நீர் பா ய்ச்சு தேயிலை செடிகளின் பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பனிகள் தேயிலை செடிகள் மீது படாமல் இருக்கின்றது.

    கடுமையான வெயிலும், கடும் பணியும் காணப்பட்டு வந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இரவு முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டங்களுடன் சிறிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பணியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
    • இதை தொடர்ந்து 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் இன்றளவும் காணப்படுவதை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் 3 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர்.

    இதனைத்தொடர்ந்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வராயன் மலை கிராமங்களில் களஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், மண்ணூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலுள்ள ராமர் கோயிலில், தீபமேற்றும் கல் தூணுக்கு அடியிலும், கோவிலின் முகப்பிலுள்ள சிறிய குடிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு அடி உயர ஆஞ்சநேயர் உலோக சிலைக்கு அருகிலும், பழங்கால மக்கள் பயன்படுத்திய, 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

    இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே படிக்க முடியாத அளவிற்கு எழுத்துக்கள் அழிந்த நிலையிலுள்ள கல்வெட்டு இருப்பதையும், மொரசம்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு, முதுமக்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் குத்துக்கல் இருப்பதையும், தாழ்வெள்ளம் கிராமத்தில், களக்காம்பாடி சாலையோரத்திலுள்ள பழமையான விநாயகர் கோயிலில் , கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளை பாதுகாத்து கிராம மக்கள் வழிபட்டு வருவதையும் கண்டறிந்துள்ளனர்.

    இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:

    'பழங்கால மனிதர்கள் வேட்டையாடுவதற்கு கற்களாலான கருவிகளையே பயன்படுத்தினார்கள். ஒழுங்கற்ற கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக்கி பயன்படுத்திய காலம், புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

    ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டை யாகவும் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள், சிறிய கைக்கோடாரி வகையை சேர்ந்ததாகும். கூரான முனை இரையை குத்திக் கிழிக்கவும், தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

    மற்ற இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 இடங்களில் பதிவாகும் காட்சிகள் பார்க்கபட்டன.

    தற்போது நடமாடும் வாகனம் மூலமும் காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    இந்த வாகனத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இந்த நடமாடும் வாகனத்தில் தெரிந்ததை பார்வையிட்டனர்.

    இந்நிகழ்வில் பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், மாநகர் நல அலுவலர் (பொ) அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை
    • கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் அரவிந்த விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கன்னியாகுமரி மாவட் டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23ம் ஆண்டு மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் ரூ.60 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 8 எண்ணத் திற்கு ரூ.64,000 நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000 மதிப்பிலான பழச் செடிகள். மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய் கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 48 ஹெக்டேருக்கு ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

    ஒரு ஹெக்டேருக்கு ரூ.15.000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின் கீழ் எண்ணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000 வழங்கப்படும்.

    உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத் தின் கீழ் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

    ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடும் விவ சாயிகளுக்கு 70 ஹெக்டே ருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடுசெய் யப்பட்டுள்ளது. இதில் பய னாளிக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26.250 மதிப்பிலான இடுபொ ருட்கள் வழங்கப்படும்.

    வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவ சாயிகளுக்கு 100 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    தோட்டக்கலை கரு விகள் மற்றும் உபகரணங் கள் விநியோகம் இனத்தின் கீழ் நெகிழி கூடைகள் 10 எண்ணத்திற்கு ரூ.37,500 அலுமினிய ஏணிகள் 40 எண்ணத்திற்கு ரூ.4 லட் சம். பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக் கருவி 30 எண்ணத்திற்கு ரூ.7,500, மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு 50 எண்ணத்திற்கு ரூ.12,500, கவாத்து கத்திரி 100 எண்ணத்திற்கு ரூ.20,000 நாப்ஸாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 15 எண்ணத்திற்கு ரூ.57,000 போன்ற அலகுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும்.

    இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×