search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள்
    X

    விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள்

    • விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவ சாயிகள் பெற்று பயன் பெறலாம். உழவுப்பணி கள் மற்றும் அறுவடைப் பணிக ளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகளுடன் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப் படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம், அதிக பட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    நன்செய் நிலம் வைத்து உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி கள் வாடகைக்கு தேவைப் படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இளை யான்குடி, காளையார் கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளரையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் காரைக்குடி உதவி செயற் பொறி யாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×