search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் ரூ.11.60 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்
    X

    நீலகிரியில் ரூ.11.60 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் வழங்கியதாக பேட்டி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், இளித்தொரை கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவா் டில்லா், பவா் வீடா்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) கீா்த்தி பிரியதா்சினி முன்னிலை வகித்தாா். குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக விவசாயத் துறைக்காக தனி பட்ஜெட் அறிவித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

    விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றால் எந்திரங்கள் பயன்பாடு அவசியம். எனவே தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் ஆகியவை ரூ.41.23 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு, விசை களையெடுப்பான் கருவிகள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன. குன்னூா் வட்டத்தில், 8 விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள், 3 பேருக்கு பவா் வீடா்கள் என மொத்தம் ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×