search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water spray equipment"

    • பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர்.
    • கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது.

    போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் நோய்கள் தாக்கி தேயிலை செடிகள் கருகி உற்பத்தி குறைந்து காணப்பட்டு வருகிறது.

    தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட ப்பட்டு உள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தேயிலை செடிகளை காப்பதற்க்கு செடிகளுக்கு மேல் பாகங்களை வெட்டி போடுதல் மற்றும் தேயிலை செடிகளின் தலைகளை பரப்பி விடுதல் என பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில் பெரும்பா ன்மையான விவசாயிகள் ஸ்பிரிங்ளர் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் மூலமாக நீர் பா ய்ச்சு தேயிலை செடிகளின் பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பனிகள் தேயிலை செடிகள் மீது படாமல் இருக்கின்றது.

    கடுமையான வெயிலும், கடும் பணியும் காணப்பட்டு வந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இரவு முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டங்களுடன் சிறிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பணியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    ×