search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு"

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பாம்பனில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது
    • பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அண்ணா நகரை சேர்ந்தவர் வில்வஜோதி (வயது32). இவர் கடந்த

    30-ந்தேதி தனது குடும்பத் துடன் சாயல்குடி அருகே ஆ.கரிசல்குளத்தில்உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையின் அலமாரியின் மேல் ஒரு பையில் ைவக்கப்பட்டிருந்த 10 பவுன் கொண்ட டாலருடன் கூடிய தங்க மாலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்த நிலையில் திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய வில்வஜோதி, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க மாலை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வில்வஜோதி கொடுத்த புகாரின்பேரில் பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது
    • வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது.

    தக்கலை :

    தக்கலை அருகே முளகுமூடு வெட்டுகாட்டு விளையில் சுமார் 200 வீடுகள் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான குரங்குகள் வீட்டுக்குள் வருவதும், பொருட்களை எடுத்து வீசுவதும் வழக்கமாக உள்ளது.

    குரங்குகள் முளகுமூடு பகுதியில் ஒரு பெண் நடத்தி வரும் கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது. இதை கண்ட அந்த பெண் கையில் வைத்திருந்த கம்பால் விரட்டியதும் அந்த பெண்ணை கடிக்க ஓடி வந்தது.

    இதுபோல் பல வீடுகளி லும் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் இந்த குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஸ்டா லின்ஜோஸ் கூறியதாவது:-

    இந்த பகுதியில் தினமும் ஏராளமான குரங்குகள் வந்து பொருட்களை எடுத்து செல்வதும் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது. வனத்துறை இப்பகுதியில் கூண்டு வைத்து அனைத்து குரங்குகளையும் பிடித்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி பிரபாவதி (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சாம்சன்லியோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
    • சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யரிடம், திருநங்கை சுபஸ்ரீ தலைமையில் மனு அளிக்க ப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருப்பூர் , மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்யமாறு வீட்டின் உரிமையாளர் கூறி வருகிறார். எங்களுக்கு எங்கு போவது என்று தெரி யவில்லை.

    எங்கள் குடும்பத்தினரும் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.
    • மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

    மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 வழித்தடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக போருர் ஏரி அருகே சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணியில் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதையொட்டிய அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் பார்த்திய நாதன். 2 தளம் கொண்ட இவரது வீட்டின் மாடியில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒருவீட்டில் மகன் ஜெரால்டு, அவரது மனைவி அஸ்வினி, மகன் ஷியாம், மகள் யாஷிகா ஆகியோரும், மற்றொரு வீட்டில் 2-வது மகனும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விட்டு உள்ளனர். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் பார்த்தியநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் பார்த்தியநாதன் வீட்டை ஒட்டிய பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்து ராட்சத கிரேனை ஊழியர்கள் இயக்க திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.

    இதில் வீட்டின் தடுப்பு சுவர்கள் மற்றும் மேல்பகுதி ஷீட்டுகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அஸ்வினி தனது மகன்ஷியாம், மகள் அஸ்வினியை வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அஸ்வினியின் கணவரான கார்டிரைவர் ஜெரால்டு வெளியே சென்று இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பிரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.

    கிரேன் மோதியதில் அருகில் இருந்த மற்ற 2 வீடுகள் மற்றும் கீழ்தளத்தில் உள்ள வீடு குலுங்கியது. சுவர்களிலும் விரிசல் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்த வர்கள்அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிரேன் பலமாக மோதி இருந்தால் அந்த கட்டிடம் முழுவதும் பலத்த சேதம் அடைந்து இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மெட்ரோ பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விபத்து ஏற்படுத்திய இந்த ராட்சத கிரேன் மெட்ரோ ரெயில் பணியில் துளையிட பயன்படுத்தப்படும் எந்திரம் ஆகும். சுமார் 100 டன் எடை கொண்டது. 200 அடிக்கு மேல் உயரம் செல்லும் வசதி கொண்டது. சாய்வாக இருக்கும் இந்த எந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும்போது அருகில் இருந்த வீட்டை கவனிக்காமல் கிரேனை இயக்கிய ஆபரேட்டர் கவனக் குறைவாக செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போரூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
    • இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சில சம்பவங்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் குற்றச் செயல்கள் குறைந்தன.

    இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மீண்டும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த காட்சியில் நள்ளிரவில் ஒரு காரில் 2 மர்ம நபர்கள் ஒரு வீட்டின் முன்பு வந்து இறங்குகின்றனர். அந்த பகுதியில் நோட்டம் போடும் அவர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.

    திடீரென ஒரு வீட்டின் கேட்டை உடைக்கிறார்கள். பால் வாங்குவதற்காக கேட்டில் மாட்டப்பட்டிருந்த பால் வாங்கும் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காரில் தப்பி செல்கின்றனர்.

    இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் கும்பல் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர்.
    • இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை சாலையூர் நால்ரோடு பகுதியில் லட்சுமணன் (51) என்பவர் வீட்டின் அருகே பட்டறை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் லெட்சுமணன், அவரது மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென மேற்கூரையில் தீ பற்றி மளமளவென பரவியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமணன் குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறியடித்து ஓடினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.

    இது குறித்து இடையகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அப்பகுதியில் பட்டாசுகள் வெடித்ததால் தீ பற்றியதா? என விசாரணை நடத்தி வருகின்றார்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    மதுரை

    திருநகர் பாலசுப்பிரமணி யம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் ஆதி (வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முன்கத வின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம்.
    • பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி பெண்களே பிரிட்ஜை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.

    ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.

    வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

    ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.

    ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.

    ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..

    மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

    ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

    ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..

    ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.

    இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.

    6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

    ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..

    ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..

    அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.

    பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    • வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
    • நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    அனைத்து வீடுகளிலும் செடிகள் மரங்கள் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. வீட்டின் கட்டமைப்புக்கு இடவசதிக்கு ஏற்றவாறு மரங்கள் சிறு செடிகள் கொடிகள் என்று தோட்டங்கள் பராமரிக்கப்படுகிறது. தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் காற்றோட்ட வசதியும் மனிதனின் உடலுக்கும் வீட்டிற்கும் பல நன்மைகளையும் தருகிறது.

    கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் வாஸ்து பார்க்காமல் செடி கொடிகள் வைப்பது தோட்டத்தை உருவாக்குவதற்கும் தோட்டத்தில் தாவரங்கள் நடுவதற்கும் வாஸ்து சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும். பண்டைய கால முதலே எந்தெந்த செடிகள் வீட்டில் வளர்க்கலாம் எங்கு வளர்க்கலாம் எந்த திசை நோக்கி வைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொண்டு தோட்டங்கள் வைப்பது சால சிறந்தது.

    உங்கள் வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மல்லிகை, மா, பலா, எலுமிச்சை, பாதாம், அன்னாசி, மாதுளை மற்றும் வேப்பமரம் இவைகளை வளர்ப்பதும் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேம்பும் மாதுளையும் மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுகிறது.

    நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இவ்வகை தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. வீட்டின் உட்புறத்தில் ஜன்னல் ஓரங்களில் செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைவது நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளே வருவதை ஜன்னல்கள் தடுக்கின்றன.

    வீட்டின் வெளிப்புறத்தில் முள் செடிகளை வளர்த்தல் நல்லது. சூரிய ஒளி தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தாவரங்களை வளர்ப்பது மிக முக்கியம்.

    வீட்டில் மா வாழை மரங்களை நடுவதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் வீட்டில் மரங்களை நடும்போது வீட்டிற்கும் மரங்களுக்கும் நடுவில் இடைவெளி அதிகமாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மரத்தின் வேர்கள் கட்டடத்தை பாதிக்காத வண்ணம் செடிகளை பராமரிக்கலாம்

    வீட்டை சுற்றி தோட்டங்கள் அமைக்கும் போது நேர்மறை ஆற்றலை உருவாக்கும் தாவரங்களை தேர்வு செய்து நடுவது மிக முக்கியம். அவைகளை எந்த திசை நோக்கி எந்த திசையில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து நடுவது நல்லது.

    வடக்கு திசைகளில் தோட்டங்கள் அமைப்பது சிறப்பானது. துளசி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். பெரிய மரங்களை வீட்டில் நடுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். தோட்டங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அவைகளை வடக்கு திசையில் வைத்து பேணிக்காப்பது நன்றாகும்.

    கிழக்கு திசை துளசி மற்றும் மரம் வைப்பதற்கு மிகவும் உகந்தது. அழகான பூந்தோட்டங்கள் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல் கிழக்கு திசையில் கட்டலாம். கிழக்கு திசையில் பெரிய மரங்கள் வைப்பது தவிர்க்க வேண்டும். கிழக்கு திசையில் சிறிய நீரூற்றுகளை அலங்கரிக்கலாம். இவையெல்லாம் நேர்மறை ஆற்றலை தரும்.

    தெற்கு திசையில் தோட்டத்தை அலங்கரிக்கும் சிலை போன்ற தோட்ட கலை அமைப்புகளை உருவாக்கலாம். அசோக மரம் போன்ற உயரமான மரங்களை தெற்கு திசை நோக்கி வைத்தால் மிகவும் நல்லது. மல்லிகை சாமந்தி போன்ற பூச்செடிகளை தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் வளர்க்கலாம்.

    மேற்கு திசையில் ஆலமரம் மா போன்ற பெரிய மரங்களை நடுவதற்கு ஏற்றது. கலை அலங்காரப் பொருட்களும் மற்றும் நீரூற்றுகளையும் மேற்கு திசையில் அலங்கரிக்கலாம்.

    வீட்டுக்குள்ளேயும் மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பது பண வரவை அதிகரிக்கும். வீட்டை சுற்றி தோட்டங்களில் கற்றாழ ஓமவள்ளி வெற்றிலை கொடி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பது வீட்டிற்கும் உடல் நலத்திற்கும் உகந்ததாகும்.

    ×