search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fridge"

    • எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம்.
    • பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி பெண்களே பிரிட்ஜை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.

    ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.

    வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

    ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.

    ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.

    ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..

    மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

    ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

    ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..

    ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.

    இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.

    6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

    ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..

    ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..

    அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.

    பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

    ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகளை பார்க்கலாம்.
    அனைவரின் வீட்டிலும் தற்போது ரெப்ரிஜிரேட்டர் பயன்பாடு உள்ளது. சிறியது, பெரியது என்ற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன. அதிக விலை கொடுத்து வாங்கும் ரெப்ரிஜிரேட்டர்களை சரியாக பராமரிப்பது மூலமே சரிவர இயங்குவதற்கும், அதன் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கும் வழிவகை செய்யமுடியும். அதுபோல் ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகள் இதோ:-

    கண்டென்ஸர் காயில்களை சுத்தப்படுத்தவும்

    ரெப்ரிஜிரேட்டரின் சரியான இயக்கத்திற்கும், மின் செலவிற்கும் உதவுவது கண்டென்ஸர் காயில்கள்தான். இதில் அதிக தூசு மற்றும் அழுக்கு படிந்து விட்டால் இதன் இயக்கம் சரிவர நடைபெறாது. அதன் மூலம் அதிக மின் செலவு ஏற்படும். எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூசு விரட்டி (அ) வாக்யூப் கிளினர் வாயிலாக கண்டென்ஸர் காயிலை சுத்தம் செய்திட வேண்டும். கண்டென்ஸர் காயில் என்பது பிரிட்ஜின் பின்புறம் (அ) கீழ் பகுதியில் இருக் கும்.

    டிரையின் ஹோல் சுத்தம் செய்தல்

    புதிய மாடல் ரெப்ரிஜிரேட்டரில் சில வகையில் டிரையின் ஹோல் இருக்காது. ஆனால் சில மாடல்களில் தண்ணீர் வெளியேற வழிப்பாதையிருக்கும். அதனை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும். அதுபோல் டிரிப் பேன்-யை வெளியில் எடுத்து கழுவி பொருத்த வேண்டும். நாம் உணவு பொருட்களின் துகள்கள் டிரையின் ஹோல்களில் அடைத்துக்கொண்டு துர்நாற்றம் ஏற்படவும், தண்ணீர் வழிந்து பிரிட்ஜ் உட்புறம் பரவும் வழி ஏற்படும். எனவே, அவ்வப்போது டிரையின் ஹோலை சுத்தம் செய்திடவேண்டும்.



    கேஸ்கட்டை சுத்தம் செய்திட வேண்டும்

    கேஸ்கட் என்பது ரெப்ரிஜிரேட்டர் கதவு மற்றும் பிரிசர் கதவுகளில் உள்ளது. இதுவே ரெப்ரிஜிரேட்டரின் உட்பகுதி குளுமை வெளியேறாமல் பாதுகாக்கும். இந்த கேஸ்கட் வெடிப்புகள் மற்றும் பிளவு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்திட வேண்டும். மேலும் இந்த கேஸ்கட்டை சுலபமாக வெளியே கழட்டி விடமுடியும். அவ்வாறு கழட்டி அதனை சோப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்திட்டு பின் மாட்டி விடலாம். இதன் மூலம் கேஸ்கட் சுத்தமாவதுடன் அதில் வெடிப்பு, பிளவு ஏற்படாது.

    உட்புற டெம்பரேச்சர் அளவை கண்காணித்தல்

    அவ்வப்போது பிரிட்ஜின் உட்புற டெம்பரேச்சர் அளவை பரிசோதித்து சரி செய்திடல் வேண்டும். அதிக பொருட்கள் உள்ளபோது 37 முதல் 40 டிகிரி வரை பாரன்ஹிட் அளவு உள்ளவாறு பராமரித்தல் வேண்டும். பிரிஸரின் டெம்பரேச்சர் என்பது 0-5 பாரன்ஹீட் அளவு இருந்திட வேண்டும். டெம்பரேச்சர் சரியாக பராமரித்தல் மூலம் மின் செலவு குறையும்.

    வாட்டர் பில்டரை மாற்றவும்

    தற்போது வரும் ரெப்ரிஜிரேட்டர்களில் ஐஸ் மேக்சன் மற்றும் ராட்டர் டிஸ்பென்சர்கள் உள்ளன. அதில் வாட்டர் பில்டர்கள் உள்ளன. அவற்றை சரியான கால இடைவெளியில் மாற்றிட வேண்டும். பெரும்பாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பில்டர்களை மாற்றுவது அவசியம். அப்படியெனில் பிரிட்ஜ் நிறுவனம் வழங்கிய மேனுவலில் உள்ள அறிவுரைப்படி மாற்றுதல் வேண்டும்.

    பிரிட்ஜ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்


    அதிக சூட்டுடன் உணவு பொருட்களை பிரிட்ஜ் உட்புறம் வைத்தல் கூடாது. அவ்வப்போது பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடவோ, அதிக நேரம் கதவை திறந்து வைத்து இருப்பதோ கூடாது. இதன் மூலம் அதிக மின் செலவு மற்றும் பிரிட்ஜ் அதிக இயக்கத்திறனை கட்டுப்படுத்திட முடியும். பிரிட்ஜ் உட்புறத்தையும் அவ்வப்போது தூய்மை செய்திடவேண்டும். ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் அளித்துள்ள பராமரிப்பு குறிப்புகளை படித்து பார்த்து அதன்படி அவ்வப்போது தூய்மை மற்றும் மாற்றவேண்டிய உபகரணங்களை மாற்றிடுதல் வேண்டும்.

    வினிகர் கொண்டு கேஸ்கட் மற்றும் உட்புற பகுதிகளை தூய்மை செய்வது மிக சிறப்பானதாக இருக்கும். 
    ஒவ்வொரு உணவுப் பொருளையும் பிரிட்ஜில் வைக்க கால அளவு உள்ளது. அந்த வகையில் உணவுப் பொருள்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்று பார்க்கலாம்.
    பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்” என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

    பழங்கள் :

    ஆப்பிள் இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
    வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
    திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
    ஆரஞ்சு, கமலா, கிரேப் இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.
    பைனாபிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்.
    தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்.
    எலுமிச்சை - இரண்டு வாரம் வைக்கலாம்.
    பெர்ரி பழ வகைகள் - பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
    பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
    திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.



    காய்கறிகள் :

    பீன்ஸ் - இதை நன்கு கழுவி, துடைத்து விட்டு பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
    கத்தரிகாய் - இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
    தக்காளி - வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம். ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
    கேரட் - நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
    பீட்ருட் - இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
    காலிபிளவர், முள்ளங்கி - இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
    வெண்டைக்காய் - 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
    உருளைக்கிழங்கு - வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
    வெங்காயம் - வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.
    குடமிளகாய் - நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
    கீரை வகைகள் - பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.
    முட்டகோஸ், செல்லரி - பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
    மஷ்ரும் - அதிகபட்சம் 2 - 3 நாட்கள் வைக்கலாம்.
    பூசணிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.



    அசைவ உணவுகள் :

    முட்டை - பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
    வேக வைத்த முட்டை - பிரிட்ஜில் 5 - 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
    முட்டை வெள்ளைக்கரு - பிரிட்ஜில் 2 - 3 நாட்களுக்குள் முட்டையின் மஞ்சள் கரு 2 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
    பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
    பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம்.
    மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.
    இறால், நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
    சமைத்த இறைச்சி - நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
    வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.
    சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள்.
    ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.
    பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.

    பால் பொருட்கள் :


    மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற தினமும் / dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.

    பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
    பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
    மோர் 2 வாரங்கள்
    தயிர் 7-10 நாட்கள்
    காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

    ×