search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AC"

    • போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவில் அகிலா பேகம் (50) மற்றும் அவரது மகள் நஸ்ரித் பேகம் (18) ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.

    அகிலா பேகத்தின் கணவர் ரஹ்மத் உயிரிழந்து விட்ட நிலையில் தாய்-மகள் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அகிலா பேகம், நஸ்ரித் பேகம் இருவரும் சாப்பிட்டு விட்டு ஏ.சி.யை போட்டுக் கொண்டு நன்றாக தூங்கினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர்கள் வசித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளரான ஜாகீர் உசேன் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    படுக்கை அறையில் பொறுத்தப்பட்டிருந்த ஏ.சி. பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்து சிதறி தொங்கிக் கொண்டிருந்தது. அகிலா பேகமும், நஸ்ரித் பேகமும் உடலில் 30 சதவீத தீக்காயங்களுடன் தரையில் கிடந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட போது வீடு முழுவதும் புகை மூட்டம் பரவியதால் இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீ சார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த நஸ்ரித் பேகம் பிளஸ்-1 மாணவி ஆவார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில்தான் அவர் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்துவிட்ட நிலையில், அகிலா பேகம் பள்ளி ஒன்றில் பணியாளராக வேலை செய்து மகளை படிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    • எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை.
    • கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதால் வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் அல்லது கழிவுநீர் உந்து நிலையம் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் கழிவுநீரில் இருந்து வெளியேறும் நீராவி மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவை வீட்டில் இருக்கும் மின் சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏ.சி. எந்திரங்களில் உள்ள செம்பு கம்பிகளை அதிகமாக பாதிக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதன் காரணமாக ஏ.சி. எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய ஒரு தொகையை செலவு செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அண்ணாநகரில் வசிக்கும் சந்தியா என்பவர் கூறும் போது, நாங்கள் சமீபத்தில் ஸ்பிலிட் ஏ.சி.யை வாங்கினோம். 15 நாட்களுக்குப் பிறகு அதில் பழுது ஏற்பட்டது. ஏ.சி. மெக்கானிக்கை வர வழைத்து பழுது பார்க்கையில் அவர் செப்புச் சுருள் மெலிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தார். அதனை சரிசெய்த பின்னர் மீண்டும் மீண்டும் இதே மாதிரி பழுது ஏற்பட்டது. அப்போதும் செப்பு கம்பியை மாற்றினோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டபோது நாங்கள் வசிக்கும் இடம் அருகில் கழிவுநீர் அதிகம் நிறைந்த ஓட்டேரி நீரோடை மற்றும் மாசுபட்ட நீரிலிருந்து வரும் நச்சுபுகைகள் ஏசி எந்திரத்தில் உள்ள செப்பு பாதிப்பதாக என்ஜினியர்கள் தெரிவித்தனர். அருகில் குடியிருப்பவர்கள் பலருக்கும் இதே நிலை தான் என்று கூறினார்.

    மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் பழுதை சரி செய்யும் பொழுது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. ரூ.50 ஆயிரம் கொடுத்து 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஏ சி. வாங்கினேன். அது ஒரே மாதத்தில் பழுதாகிவிட்டது என்றார்.

    மேலும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரம்பூர் மற்றும் கொரட்டூர் பகுதி களில் குடியிருப்பவர்கள் அருகில் இருக்கும் கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் வாயுக்களால் ஏ.சி. எந்திரங்களில் பழுது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதற்காக நாங்கள் நிறைய பணம் செலவழிக்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டி. சுவாமிநாதன் கூறியதாவது:-

    தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியேகிறது. இது அழுகிய முட்டையை போன்ற துர்நாற்றத்தை வீசும். இது கந்தகமாகவோ அல்லது கந்தக அமிலமாகவோ மாறக்கூடும். இவை ஏ.சி.யின் செப்புப் பகுதிகளுடன் வினைபுரிந்து, அதை அரித்து வாயு கசிவை ஏற்படுத்துகிறது.

    மற்ற மின் சாதனங்களில் ஏ.சி.யை போல அதிக செப்பு பாகங்கள் இல்லை, அதனால்தான் டி.வி. போன்ற பிற மின் சாதனங்களை விட ஏ.சி. எந்திரங்கள் மட்டுமே அடிக்கடி சேதமடைகின்றன என்றார்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை. வாழ்த்தினர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை ஒன்றியம் பாளை வடக்கு வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் நொச்சி குளம் பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடா சலபதி பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு தனது பிறந்த நாளை கேக்வெட்டி அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுட னும், ஊர் பொது மக்களுடனும் கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் குளோரிந்தாள், பாளை மேற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், சீனிவாசன், ஆனந்தி சந்திரசேகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், நொச்சிகுளம் கிருஷ்ணாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துக்கென்னடி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை வாழ்த்தினர்.

    • 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
    • வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.

    • ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.
    • கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை இடையேயான அதிவிரைவு ெரயிலில் 2 அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை (22475) அதிவிரைவு ரெயில், வாரம் தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 8 முதல் 29 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாம்பு பிடிக்கும் வாலிபர் வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார்.
    • ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

    இந்த கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை கடையில் அதன் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.

    ஏசியை இயக்குவதற்காக சுவிட்ச் போடுவதற்காக சென்றார். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாம்பு ஒன்று ஏசியில் இருந்து வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் கடையில் இருந்து அனைவரும் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து பாம்பு பிடிக்கும் இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் அங்கு வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார். 

    கார் பயணங்களில் ஏ.சி. போடாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்ற வகையில், ஏ.சி.யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். #automobile
    கோடைக்காலம் மட்டுமில்லை, அனைத்து காலத்திலும் காரில் ஏசி சிஸ்டத்தின் பயன்பாடு இன்றைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாண்டால், பிரச்சனைகள் இல்லாத சுகமான பயணத்தை அனுபவிக்கலாம். கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாள்வதன் மூலமாக பல அனுகூலங்களையும் பெற முடியும்.

    எந்தெந்த நேரத்தில் கார் ஏசியை எவ்வாறு இயக்குவது குறித்த சில வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

    கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது கார் ஏ.சி. பயன்படுத்துவதில் கவனம் தேவை. வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஏ.சி.யை ஆன் செய்தால், உடனே ஜன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.



    ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ஏ.சி.யை ஆன் செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு ஜன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.

    இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் ஏ.சி.யை போட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் என்ஜின் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

    மேனுவல் ஏசி காராக இருந்தால், ஏசி மெஷினை ஆன் செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி இருந்தால் ஆரம்பத்தில் ஃபேன் வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும்.   #automobile
    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. #DeluxeBus
    கரூர்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவை விட செலவு கூடுதலாக உள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. சேவை நோக்குடன் இயக்கப்படுவதால் நஷ்டம் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே தனியாருக்கு இணையாக நவீனங்கள் புகுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு காரணியாக உள்ளது. தனியார் மூலம் படுக்கை வசதியுடன் குளு, குளு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 2,000 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

    அதில் 100 பஸ்கள் படுக்கை வசதியுடன் 3 வகையாக தயாராகின்றன. முழுக்க முழுக்க ஏ.சி. மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு வகையும், கீழே சாய்வாக உட்காரும் சீட்டுகள், மேலே படுக்கை வசதியுடன் இன்னொரு வகையும், படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் மற்றொரு வகையும் என 100 பஸ்கள் விதவிதமாக தயாராகின்றன. இவை அனைத்தும் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

    பெங்களூரில் உள்ள தனியார் பஸ் பாடிகட்டும் நிறுவனம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் பாடி கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக பாடி கட்டப்பட்ட இந்த வகை பஸ் ஒன்று சமீபத்தில் கரூர் மண்மங்கலம் போக்குவரத் துக்கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் எப்போது இயக்கப்படும் என அமைச்சரிடம் மாலை மலர் நிருபர் கேட்டபோது கூறியதாவது:-


    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நவீனமாகிறது. ஜெயலலிதா அறிவித்த 2,000 பஸ்களும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகின்றன. சாதாரண பஸ்களும் மழை பெய்தால் ஒழுகாது. ரூப் ஒரே மோல்டிங்கில் வடிவமைக்கப்படுகிறது. அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் இருக்கையில் தீப்பிடிக்காமல் இருக்கும் வகையில் சீட்டுகள் அமைக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்கும் சீட்டுகளின் சாய்வு முன்பைவிட அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் இன்னும் சொகுசாக தூங்கியபடி பயணிக்கலாம்.

    படுக்கை வசதி, ஏ.சி. வசதியுடன் தயாராகும் பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிச்சயம் நிறைவேறும். தனியாருக்கு இணையாக இல்லாமல் அதையும் மிஞ்சும் வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar #DeluxeBus
    ×