search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother daughter death"

    • போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவில் அகிலா பேகம் (50) மற்றும் அவரது மகள் நஸ்ரித் பேகம் (18) ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.

    அகிலா பேகத்தின் கணவர் ரஹ்மத் உயிரிழந்து விட்ட நிலையில் தாய்-மகள் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அகிலா பேகம், நஸ்ரித் பேகம் இருவரும் சாப்பிட்டு விட்டு ஏ.சி.யை போட்டுக் கொண்டு நன்றாக தூங்கினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர்கள் வசித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளரான ஜாகீர் உசேன் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    படுக்கை அறையில் பொறுத்தப்பட்டிருந்த ஏ.சி. பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்து சிதறி தொங்கிக் கொண்டிருந்தது. அகிலா பேகமும், நஸ்ரித் பேகமும் உடலில் 30 சதவீத தீக்காயங்களுடன் தரையில் கிடந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட போது வீடு முழுவதும் புகை மூட்டம் பரவியதால் இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீ சார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த நஸ்ரித் பேகம் பிளஸ்-1 மாணவி ஆவார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில்தான் அவர் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்துவிட்ட நிலையில், அகிலா பேகம் பள்ளி ஒன்றில் பணியாளராக வேலை செய்து மகளை படிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    கரூரில் தூங்கும்போது ஜெனரேட்டர் புகை வீட்டினுள் முழுவதும் மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கரூர்:

    கரூர் ராமானுஜம் நகர் வாய்க்கால்மேடு ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 48). தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரி(40). மகள் ராகவி(16), மகன்கள் ரஞ்சித்(14), ரகு(13). இதில் ராகவி சென்னையில் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். வேட்டமங்கலத்தில் ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ரஞ்சித் 9-ம் வகுப்பும், ரகு 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சமீபத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் “ரெட்அலர்ட்” அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி ராகவியை, கரூரிலுள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்தநிலையில் ஜே.ஜே.நகரில் ஒரு மின்கம்பத்தில் வயர்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறி கிளம்பியதால், சில நாட்களுக்கு முன்பு பல்வேறு வீடுகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் வயர்களை சரிசெய்து வீடுகளுக்கு மின்வினியோகம் செய்தனர். எனினும் ராஜா வீட்டுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு தனது பழக்கடையில் இருந்த ஜெனரேட்டரை ராஜா வீட்டுக்கு எடுத்துவந்தார். அதிலுள்ள சுவிட்ச் பெட்டியிலிருந்து ஒரு டேபிள்பேனுக்கு மட்டும் இணைப்பு கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    இதையடுத்து சுந்தரி, அவரது மகள் ராகவி ஆகியோர் கதவினை லேசாக மூடிவிட்டு தூங்கினர். மண்எண்ணெயில் இயங்கிய அந்த ஜெனரேட்டரில் இருந்து இரவு முழுவதும் கரும்புகை வெளியேறியது. வீட்டின் வாசல் அருகே டேபிள்பேன் சுற்றியதால், ஜெனரேட்டர் புகை வீட்டினுள் பரவியது. தூங்கி கொண்டிருந்த சுந்தரியும், ராகவியும் இதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டினுள் முழுவதும் புகை மண்டி, சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காலை வீட்டுக்கு வந்த ராஜா, தனது மனைவி, மகள் பிணமாக கிடந்ததை பார்த்து, கதறி அழுதார்.

    இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    ×