search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாட்டி  வதைக்கும் வெயிலால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிப்பு
    X

    கோப்புபடம்.

    வாட்டி வதைக்கும் வெயிலால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிப்பு

    • 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
    • வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.

    Next Story
    ×