search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாணியம்பாடி அருகே கடையின் ஏசியில் புகுந்த பாம்பு- ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    ஏசியில் புகுந்த பாம்பை படத்தில் காணலாம்.

    வாணியம்பாடி அருகே கடையின் ஏசியில் புகுந்த பாம்பு- ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

    • பாம்பு பிடிக்கும் வாலிபர் வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார்.
    • ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

    இந்த கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை கடையில் அதன் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.

    ஏசியை இயக்குவதற்காக சுவிட்ச் போடுவதற்காக சென்றார். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாம்பு ஒன்று ஏசியில் இருந்து வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் கடையில் இருந்து அனைவரும் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து பாம்பு பிடிக்கும் இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் அங்கு வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

    Next Story
    ×