search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunny"

    • ஒரே நாளில் 244 மி.மீ. மழை கொட்டியது.
    • நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் குளிர்ந்த காட்சி வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

    பின்னர் இரவு முழுவதும் குளிர்ந்த காட்சி வீசி கொண்டிருந்தது.

    இதே போல் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருவிடைமருதூர், அதிரா ம்பட்டினம் ,பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. ஒரே நாளில் 244.50 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு ;-

    திருவிடைமருதூர்-16.60, வெட்டிக்காடு-16.40, ஒரத்தநாடு-15, திருக்காட்டுப்பள்ளி- 14.40, ஈச்சன்விடுதி - 10.20, கும்பகோணம் -9.60, தஞ்சாவூர் -8, திருவையாறு -7 ஆகும்.

    • தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
    • அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.

    அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழில் நடித்து வரும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. #SunnyLeone #Sunny #VeeramaDevi
    நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரமாதேவி' படம் மூலம் முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை, வீரமாதேவி என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகின்றனர். இதில் வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.

    இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், சன்னிலியோனை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
    பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். #SunnyLeone
    கர்நாடகாவை ஆண்ட வீரமாதேவி ராணியின் வாழ்க்கையை திரைப்படமாக தமிழ்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார். இதில் வீரமாதேவி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

    இந்த நிலையில் ராணி வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிக்க கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூருவில் அனந்தராவ் சதுக்கம், டவுன் ஹால், மைசூர் வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சன்னி லியோனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர்.



    இதுகுறித்து கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:-

    வீரமாதேவி வரலாற்று புகழ்மிக்க அரசி. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் நடிப்பதை ஏற்க முடியாது. கர்நாடகாவை சிறப்பாக ஆட்சி செய்த வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிப்பதன் மூலம் கன்னட மக்களை இழிவுப்படுத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

    எனவே இப்படத்தின் படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும். இந்த வேடத்தில் சன்னிலியோன் நடிக்கக்கூடாது. இல்லையென்றால் வருகிற நவம்பர் 3-ந்தேதி பெங்களூரில் சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்றார்.
    ஆபாச படங்களில் நடித்து தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தன்னுடைய குடும்பத்தை இழந்தது குறித்து கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    நீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதன் 2-ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- நீலப்பட நடிகையாக இருந்ததில் இழந்தது என்ன?

    ப:- என்னோட குடும்பத்தை தான். நான் என்ன செய்கிறேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் என்மீது கோபப்பட்டார்கள். கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.



    கே:- உங்கள் வாழ்க்கை தொடரில் நீங்களே நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது?

    ப:- இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் நடிக்கும் போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்தது. ஒரு ஆபாச நடிகையாக தான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீர்கள்.

    என் வாழ்க்கையில் நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு முறை கடந்து வந்த மாதிரி இருந்தது. நான் பொதுவா எமோ‌ஷனலான ஆள் கிடையாது.

    இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும் போது தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ‘‘இதற்கு பிறகு மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம்.

    ‘நான் உங்களோட பெரிய விசிறின்’னு ரசிகர்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோ‌ஷமா இருக்கணும்’னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது.



    கே:- இதை படமாக எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டிருக்கலாமே?

    ப:- ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த வி‌ஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணிக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. அதனால், வெப் சீரீஸ்தான் பெஸ்ட்.

    கே:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது பற்றி?

    ப:- எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்கிறது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புணர்வையும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், என் கணவருக்கு பிடிக்காதது எது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார்? என்று சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

    அவர் கூறியிருப்பதாவது:–

    ‘‘முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம். 



    வருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம். நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க தொடங்கினார்!’’

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    சன்னிலியோன் வாழ்க்கை கதை படமான ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. #SunnyLeone
    சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

    சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம் வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன. 

    படத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டு உள்ளது. 



    இது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக செலவில் இந்த தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளனர். #SunnyLeone
    பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று ஆபாச பட நடிகை சன்னி லியோன் கூறியிருக்கிறார். #SunnyLeone
    கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

    கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.



    இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.

    பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களும் ஒன்று தான் என இந்தியாவில் உள்ள மக்கள் நினைக்கிறார்களே என சன்னி லியோனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சன்னி லியோன், இந்த எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை தைரியம் தான் என்கிறார்.

    படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். #SunnyLeone
    ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடிய சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திரைப்படங்கள் மட்டுமில்லாமல், டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




    தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்கள். #SunnyLeone
    இந்தி, தமிழ் படங்களில் நடித்து வரும் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன், சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து 1000 முறை கதறி அழுதிருக்கிறார். #SunnyLeone
    கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை.

    பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். தமிழில் அவர் நடிக்கும் வீரமாதேவி சரித்திர படம் அதற்கு உதவும் என்று நம்பி இருக்கிறார்.



    சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர். இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதார். “ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று படத்தை பற்றிய உணர்வுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    ×