search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "light rain"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர், ஏற்காடு, கரியகோவில், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. ஏற்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த மழையினால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ஆனைமடுவு - 12, மேட்டூர் - 10, ஏற்காடு - 6.4, கரியகோவில்- 2, ஆத்தூர்- 1.8, பெத்தநாயக்கன்பாளையம்-1.5, எடப்பாடி-1.2,சேலம் - 1, ஓமலூர்-1 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35.50 பதிவாகி உள்ளது.

    • கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டத்தில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதற்காக இரும்புதலை, ரெங்கநாதபுரம், பொன்மான்மேய்ந்தல்லூர், சாலியமங்களம், கோவத்த குடி, கொத்தங்குடி, நிம்மேலி, காந்தாவனம், ராராமுத்திரகோட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யு ம்பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதோடு மழை பொழிவு காரணமாக நெல் அறுவடை செய்யும் பணியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
    • அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.

    அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ேமகம் மந்தமாக காணப்படுவதால் வெப்பம் குறைந்தது
    • நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பு

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைக்கிராம பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

    ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.இந்த மழை கடந்த வாரம் முதல் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்தது.

    ஆலங்காயம் தாலுக்காவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்துள்ளது. இந்த பருவத்துக்கான விதைப்பு பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள், மழையால் பயனடைந்தனர். ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் சோளம் உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் பயிடப்பட்டுள்ளன.

    இதுபோன்ற மழையால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய உதவுகிறது. பாலாற்றின் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முந்தைய வடகிழக்கு பருவமழையின் போது மழை குறைவாக இருந்ததால், இதுபோன்ற மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

    இந்த கோடையில் வறண்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தற்போது, வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 944 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களான வாலாஜா, ஆற்காடு, திமிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்ப டுகிறது. இத்திட்டத்திற்காக பாலாற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கப்பட்டன.

    தற்போது, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், இத்திட்டத்தை செயல்ப டுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குழாய்களில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இத்தகைய திடீர் மழை அதிகப்படியான ஆவியாதலை குறைக்க உதவும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது.
    • திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து தூரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், அதனால் ஏற்பட்ட குளிராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.இதேப்போல் திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    • வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் காலை 10:30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் இரண்டு நாட்களில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    திடீரென பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்ததால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
    • இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் குறைந்த அளவே பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.

    பனிப் பொழிவு

    இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு காலை 7 மணிவரை இருக்கிறது.

    இதனால் காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சாரல் மழை

    இந்நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பிற்பகலில் டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் சாரல் மழையால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த

    29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

    இன்று காலையிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் ஓடியது. சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, மேட்டூர், எடப்பாடி, கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வீரகனூர் -24, ஏற்காடு-19.8, ஆத்தூர்- 19, தம்மம்பட்டி-17, கரிய கோவில்- 14, கெங்கவல்லி - 13, கடையாம்பட்டி-11, பெத்தநாயக்கன்பா ளையம்-8, சேலம்- 7.3, ஆனைமடுவு - 7, மேட்டூர்- 5.4, ஓமலூர்- 5, சங்ககிரி - 4.3, எடப்பாடி-4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 104.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • தேவதானப்பட்டியில மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேவனப்பட்டி:

    தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடுகபட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி, சில்வார்பட்டி முதல்லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கடந்த 25 நாட்களாக மழை பெய்யாத நிலையில் தற்போது 2வது நாளாக பெய்த மிதமான மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் ப ல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக கரியகோவில், கெங்கவல்லியில் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் பரவலாக பெய்தது . இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் குளிர்

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் உள்ளதால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளது குறிப்பிட தக்கது.

    290.4 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8 மணி வரை கரியகோவிலில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி 36, ஆனைமடுவு 31, வீரகனூர் 27, ஏற்காடு 26.4, காடையாம்பட்டி 26, பெத்தநாயக்கன் பாளையம் 25, ஆத்தூர் 24.2, தம்மம்பட்டி 23, ஓமலூர் 12, சேலம் 9, சங்ககிரி 5, எடப்பாடியில் 4.4. மி.மீ. மழை எ ன மாவட்டம் முழுவதும் 290.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை
    • நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணாநகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவில் நீண்ட நேரம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கட்டில் கடைக்காரர்கள், பலகாரக் கடைக்காரர்கள், பழ கடைக்காரர்கள், டிபன் விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்காரர்கள், துணிக்கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததால் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×