திருப்பூர்-பல்லடத்தில் சாரல் மழை

மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது.திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து தூரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், அதனால் ஏற்பட்ட குளிராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.இதேப்போல் திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com