search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
    X

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

    • வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    மதுரை

    திருநகர் பாலசுப்பிரமணி யம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் ஆதி (வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முன்கத வின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×