search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்
    X

    கோட்டாட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள்.

    இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்

    • மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
    • சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யரிடம், திருநங்கை சுபஸ்ரீ தலைமையில் மனு அளிக்க ப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருப்பூர் , மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்யமாறு வீட்டின் உரிமையாளர் கூறி வருகிறார். எங்களுக்கு எங்கு போவது என்று தெரி யவில்லை.

    எங்கள் குடும்பத்தினரும் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×