என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முளகுமூட்டில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்
- கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது
- வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது.
தக்கலை :
தக்கலை அருகே முளகுமூடு வெட்டுகாட்டு விளையில் சுமார் 200 வீடுகள் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான குரங்குகள் வீட்டுக்குள் வருவதும், பொருட்களை எடுத்து வீசுவதும் வழக்கமாக உள்ளது.
குரங்குகள் முளகுமூடு பகுதியில் ஒரு பெண் நடத்தி வரும் கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது. இதை கண்ட அந்த பெண் கையில் வைத்திருந்த கம்பால் விரட்டியதும் அந்த பெண்ணை கடிக்க ஓடி வந்தது.
இதுபோல் பல வீடுகளி லும் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் இந்த குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஸ்டா லின்ஜோஸ் கூறியதாவது:-
இந்த பகுதியில் தினமும் ஏராளமான குரங்குகள் வந்து பொருட்களை எடுத்து செல்வதும் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது. வனத்துறை இப்பகுதியில் கூண்டு வைத்து அனைத்து குரங்குகளையும் பிடித்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்