search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கம்"

    • வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் கைதிகளை எவ்வாறு நடத்துவது, காவல் நிலையத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்பாடுகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் உழவர் சந்தை அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பணி புரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மாலை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினர். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அம்மா உணவகம் சாவியை வழங்க வேண்டும் என அதிரடியாக  உத்தரவிட்டனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் காரணமின்றி எங்களை பணி நீக்கம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரனை நேரில் சந்தித்தனர். அப்போது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர்களை அரசியல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சார்பில் அம்மா உணவகத்தில் பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்தபோது மதியம் விற்பனைக்காக சமைக்கப்பட்ட உணவு அதிகாலையில் சமைத்து சூடான முறையில் இல்லாமலும், தரமற்றதாகவும் இருந்தது. மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தினமும் அதிகளவில் அம்மா உணவகத்தில் உணவு உண்டு வருகின்றனர். ஆனால் முழு அளவில் கணக்கில் காட்டாமல் மாநகராட்சி கருவூலத்தில் விற்பனையாகும் தொகையை குறைவாக செலுத்தி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகத்தில் தினசரி 3600 ரூபாய் செலுத்தி உள்ளார்கள். ஆனால் தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 1000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். விதிமுறைகளின் படி அம்மா உணவகங்களில் மதியம் உணவில் கட்டாயமாக தயிர் சாதம் சமைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தெரிவித்தும் தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

    மேலும் சமையல் செய்யும்போது பணியாளர்கள் கட்டாயம் தலையில் தொப்பி அணிந்து, கையுறைகள் அணிந்தும் பணி புரிய வேண்டும். சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அம்மா உணவகம் விதிமுறைகளுக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் இது போன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் 3 தினங்களுக்குள் எழுத்து மூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடலூரில் அம்மா உணவகத்தின் நீக்கப்பட்ட பெண் பணியாளர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற உணவு சமைத்திருப்பதாகவும், சரியான முறையில் விற்பனை செய்யப்பட்ட பணம் செலுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பதாகவும் தெரிவித்து அதற்கு விளக்க கடிதம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
    • இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.

    மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-

    தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.

    தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.

    இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,

    பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
    • வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னோடி விவசாயி மணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் குழந்தைவேல் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    மாணங்கொண்டான் முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.

    வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே, இதை தவிர்க்க ஆறுகளில் உள்ள வெங்காய தாமரை ெசடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.

    கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழா நடைபெற்றது.
    • ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறை சார்பாக தொடர்புத் திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆங்கிலத் துறையின் சார்பாக "தொடர்புத் திறன்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழாவானது நடைபெற்றது.

    முனைவர் அசாருதீன் வரவேற்றார்.

    கல்லூரியின் முதல்வர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். முனைவர் முகம்மது இஸ்மாயில், முனைவர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்ரீமதி. ஜோதிமணி அம்மா, செயலர் செந்தில் குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஆலோசகர் செவாலியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் முனைவர் அசாருதீன் ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

    பின்னர் அந்த புத்தகங்களை மதிப்பாய்வு செய்து இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான கோபிநாத், ஆங்கிலத்துறையின் தலைவர் முத்துகுமார், மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் குணாளன் உரையாற்றினர்கள்.

    அதனை தொடர்ந்து ஆங்கில மொழி கற்றலின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு விருந்தினர் கோபிநாத் சிறப்புரையாற்றி, மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து மாணவ ர்களுடன் உரையாடினார்.

    நிகழ்வின் இறுதியில் முனைவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    • ரெயில்வே தேர்வில் முறைகேடா? என மதுரை அதிகாரி விளக்கம் அளித்தனர்.
    • தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    மதுரை

    மத்திய ரெயில்வே துறையில் தொழில்நுட்ப உதவியாளர், ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய வேலைக்கான போட்டித் தேர்வு கணினி மூலம் நடந்து வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்வுகள் முடிந்து விட்டன.

    தற்போது 4-ம் கட்ட தேர்வு நடந்து வருகிறது. ரெயில்வே தேர்வில் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை ரெயில்வே அதிகாரி கூறுகையில், "ரெயில்வே தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், கேள்வித்தாள்கள் 256 அளவு இலக்க குறியீடுடன் கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளது.

    விண்ணப்பதாரருக்கான தேர்வு மையம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவற்றில் கூட வரிசை தவிர்க்கப்பட்டு உள்ளது. வினாத்தாளிலும் கேள்விகள் மற்றும் 4 விருப்ப விடைகள் வரிசையாக இருக்காது.

    ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசை இல்லாத கேள்விதாள்கள் கணினியில் தோன்றும். தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது ஆதாரமற்றது.

    தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே பணிகளுக்கான தேர்வு, நேர்மையான முறையில் நடந்து வருகிறது.

    குறுக்கு வழியில் ரெயில்வே வேலை வாங்கித் தருவதாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரெயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்து இருப்பதாக தெரிவித்தார்.

    • இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. படைப்புழு தாக்குதல், தரமற்ற விதை, சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் பருவ மழையை எதிர்பார்த்தும், இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:- மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முன் ஏற்பாடாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிலத்திலுள்ள தாய் அந்துப்பூச்சிகள் கூண்டுப்புழுவிலிருந்து வெளிவருவதில்லை.

    அடுத்து விதை நேர்த்தி அவசியமானதாகும்.விதையினை சையன்ட்ரானிபுரோல் 19.8 மற்றும் தயோ மீதாக்சோம் 19.8 மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி மற்றும் 15 லிட்டர் நீர் கலந்து அரை மணி நேரம் நிலத்தில் உலர்த்தி பின் விதைகளை நிலத்தில் விதைக்க வேண்டும்.மேலும் வரப்பு ஓரத்தில் எள், சூரியகாந்தி, துவரை, தட்டை, உளுந்து, சோளம் ஆகிய தானிய பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
    • விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    இந்தநிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

    கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக, புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஏழு நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மானாமதுரை அருகே அரசுத்துறை புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், எம்.கரிசல்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

    இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் தராதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருவேடகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் விழா மற்றும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய தாவது-

    சென்னையில் நடந்த தி.மு.க. திராவிட மாடல் பயிற்சியின் போது பேசிய உதயநிதி பிரதமர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் எப்படி பேசினார் அது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறார். அந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வினரை வைத்து மு.க.ஸ்டாலின் பேசும்போது கைதட்டுவது தான் மாடலா, அரசு விழாவில் தி.மு.க. காரர்களுக்கு கை தட்ட பயிற்சி கொடுப்பதுதான் திராவிட மாடலா?.

    மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்ற மாயதோற்றத்தை உருவாக்க ஒரு போலி நாடகத்தை அந்த விழாவில் அரங்கேற்றியுள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது உதயநிதியை முன்னிலைப்படுத்தும் பயிற்சியாகும்.

    பெரியாருக்கு முன் ஐம்பெரும் தலைவர்களான அயோத்திதாசர், பி.டி. தியாகராஜர், நடேசனார், பனகல் அரசர் உள்ளிட்டோர் 100 ஆண்டுக்கு முன்பாக திராவிட விளக்கம் அளித்துள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது ஏமாற்று வேலை. ஐம்பெரும் தலைவர்கள், மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தங்கள் வாரிசுகளை நியமிக்கவில்லை.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தற்போது தி.மு.க. மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல முன்வரவில்லை ஏன்?தி.மு.க. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியா கும். இந்த அரசின் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளனர். எப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க.விற்கு ஊழலை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு கொண்டு செல்வேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவர் சொல்கிறபடி சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தி.மு.க.விற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்க தயாராக இல்லை. தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்ட மும் செய்ய தயாராக இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் மக்களை ஏமாற்றுவதுதான்.

    அ.தி.மு.க. செய்த சாதனை திட்டங்களையும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களையும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களுக்கு தொடர்ந்து கிராமந்தோறும் எடுத்து நாம் கூறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×