search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம்"

    • ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாலிபர்கள், மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

    இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று இரவு பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மசாஜ் சென்டரில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்படும் ஸ்வைப் எந்திரம் மற்றும் ரூ. 32 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என போலீசாரிடம் கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    அப்போது விபசாரத்திற்கு தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர். அங்கிருந்த 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    • நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.
    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    அப்போது மசாஜ் செய்வதாக கூறி ஆசையை தூண்டி சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் புரோக்கர்களான 3 பேரை கைது செய்தனர்.
    • வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் அட்கோ போலீசார் சோதனை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அஞ்சலகிரியை சேர்ந்த சின்னபிட்டப்பா மகன் சீனிவாஸ் (வயது25), கிருஷ்ணகிரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி (32), பெங்களூரு பண்டே பாளையா சின்னசாமி லேஅவுட்டை சேர்ந்த முனுசாமி என்கிற முனி (48) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து வடமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும் தெரிந்தது. உடனே போலீசார் புரோக்கர்களான 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஓசூர் அட்கோ போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் (வயது24), வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

      போரூர்:

      வடபழனி, வெள்ளாளர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

      இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 2 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் அங்கிருந்த வடமாநில இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சென்று வீட்டின் உரிமையாளரிடம் தம்பதிகள் போல நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்பது தெரிந்தது. தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

      • போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது.
      • தீபிகா (32) என்பவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

      ஓசூர், 

      கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இளம்பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடந்து வந்தது.

      இதையடுத்து அந்த சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி அங்கம்பட்டி துளசிராமன் (31), பர்கூர தாலுகா மருதேப்பள்ளி பக்கமுள்ள சூலாமலையை சேர்ந்த சூடப்பன் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

      இதே போல மாருதி நகரில் பியூட்டி சென்டர் சென்ற பெயரில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது.

      அந்த இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் தள்ளியதாக கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பாலா நாகசெட்டிஅள்ளி பந்தாரப்பா லேஅவுட்டை சேர்ந்த தீபிகா (32) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

      • அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர்.
      • கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

      சென்னை:

      மடிப்பாக்கம் சீனிவாச நகர் சம்மந்தர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

      தகவலின் பேரில் சம்பவ இடத்தில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

      அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைத்த 4 பேரில் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

      போலீசில் சிக்கிய அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர். கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

      • 2 பெண்கள் மீது போலீசார் வழக்கு
      • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      நாகர்கோவில் :

      குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ரூபேஷ் (வயது 24), கோட்டார் நாராயணகுரு மண்டபம் அருகில் நின்றபோது, 2 பெண்கள் அங்கு வந்து விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டார் போலீசில் ரூபேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்
      • இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

      கன்னியாகுமரி :

      ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒருவருக்கு குமாரபுரம் நாலு வழிச்சாலையில் மாடி வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளர் அந்தப் பக்கம் சென்ற போது ஆண்களும் பெண்களும் நடமாடியதை கண்டு சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் அரைகுறை ஆடையோடு சில ஆண்களோடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

      இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

      இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆல்வின் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த வாலிபர்களை தேடிய போது வழக்கில் சம்பந்தப்பட்ட வள்ளியூர் ஹரி ராமராஜா (வயது 30), சுசீந்திரம் மகேஷ் (43) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட னர்.

      • பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
      • விபசார தொழில் செய்த புரோக்கர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

      கோவை,

      பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு அழகியை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. போலீசார் அழகியை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் சூலூர் அருகே உள்ள தோட்டத்து சாலையை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 30 வயது அழகியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

      • பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
      • திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்

      கன்னியாகுமரி :

      குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

      இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

      இதில் கன்னியாகுமரி பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சுசீந்திரத்தில் ஒரு வீட்டில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

      இதற்கிடையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்தப்படு வதாக புகார் வந்தது. மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

      அப்போது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

      இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்கி ருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

      • மேலாளர் கைது
      • வாலிபருக்கு எச்சரிக்கை

      வேலூர்:

      வேலூர் காந்திரோடு, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்ப தாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள விடுதி களில் அதிரடியாகசோதனை செய்தனர்.

      அப்போது பாபுராவ் தெரு வில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் இளம்பெண்ணும், வாலிபரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

      போலீசாரின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கும் விடுதியை குத்தகை எடுத்து நடத்தி வருவதும், அங்கு மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

      மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

      • இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
      • மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது போலீசார் சோதனையில் தெரியவந்தது.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

      அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

      இதையடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த ரதினா(எ) ரத்தினவேணி (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

      ×