search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் மாடி வீட்டில் விபசாரம்; 2 பேர் கைது
    X

    ஆரல்வாய்மொழியில் மாடி வீட்டில் விபசாரம்; 2 பேர் கைது

    • திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்
    • இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒருவருக்கு குமாரபுரம் நாலு வழிச்சாலையில் மாடி வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளர் அந்தப் பக்கம் சென்ற போது ஆண்களும் பெண்களும் நடமாடியதை கண்டு சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் அரைகுறை ஆடையோடு சில ஆண்களோடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

    இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆல்வின் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த வாலிபர்களை தேடிய போது வழக்கில் சம்பந்தப்பட்ட வள்ளியூர் ஹரி ராமராஜா (வயது 30), சுசீந்திரம் மகேஷ் (43) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட னர்.

    Next Story
    ×