search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "massage centre"

    • ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாலிபர்கள், மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

    இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று இரவு பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மசாஜ் சென்டரில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்படும் ஸ்வைப் எந்திரம் மற்றும் ரூ. 32 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என போலீசாரிடம் கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    அப்போது விபசாரத்திற்கு தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர். அங்கிருந்த 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் மசாஜ்சென்டர்செயல்பட்டு வருவதாகவும் இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதா கவாவும் மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு 5 பெண் கள், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இளம் பெண்களை வரவைத்து அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்திய செந்தமி ழ்ச்செல்வன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்ட போலீசார் மசாஜ் சென்டர் மேலாளரை கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் என்கிற பெயரில் வெளி மாநில பெண்களை வைத்து சிலர் விபச்சாரம் நடத்தி வருவதாக தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன.

    அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் முதல் தளத்தில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனடியாக மசாஜ் சென்டர் மேலாளர் ஜெயந்தி(42) என்பவரை கைது செய்தனர். இவர் வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த அழகிகள் 5 பேரையும் மீட்டு மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை அழைத்து மசாஜ் என்கிற பெயரில் நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×