search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம்- மேலும் 3 பேர் கைது
    X

    வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம்- மேலும் 3 பேர் கைது

    • போலீசார் புரோக்கர்களான 3 பேரை கைது செய்தனர்.
    • வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் அட்கோ போலீசார் சோதனை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அஞ்சலகிரியை சேர்ந்த சின்னபிட்டப்பா மகன் சீனிவாஸ் (வயது25), கிருஷ்ணகிரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி (32), பெங்களூரு பண்டே பாளையா சின்னசாமி லேஅவுட்டை சேர்ந்த முனுசாமி என்கிற முனி (48) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து வடமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும் தெரிந்தது. உடனே போலீசார் புரோக்கர்களான 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஓசூர் அட்கோ போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் (வயது24), வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×