search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி விழா"

    • இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.
    • இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    தாமரை விநாயகர், சிவன் விநாயகர், அன்ன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இடங்களில் வைத்து வழிபாட்டுக்கு பின் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் நகர் பகுதியில் பொது இடங்களில் 60 சிலைகள் வைக்க இந்து அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

    அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும் என போலீசார் தெரிவி த்திருப்பதால் சிலைகள் வைத்தற்கான இடங்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

    • மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்க ளாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது.

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி.), பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    * சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.

    வாழப்பாடி:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.

    பொதுவாகவே விநாயகர் சதுர்த்தியன்று பல்ேவறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டதாரி இளைஞர் பாலாஜி(36) மற்றும் இவரது சகோதரர் முத்துக்குமார் (34) உள்ளிட்ட குடும்பத்தினர், புதிய தொழில்நுட்பத்தில் விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி நெருங்கியுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இவர்கள் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விநாயகர் சிலை பாகங்களை கொள்முதல் செய்து கொண்டு வரும் இவர்கள் கைவினைக் கலைஞர் களுடன் ஒருங்கிணைந்து நவீன தொழில்நுட்பத்தில் பாகங்களை ஒட்டவைத்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    நவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் விநாயகர் சிலைகளை பார்வையிட விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரும் இளை ஞர்களும் படைடுத்து வருகின்றனர்.

    இது குறித்து கைவினைக் கலைஞர் பாலாஜி கூறியதாவது:-

    எனது பெற்றோர்களுக்கு மண்பாண்டங்கள் செய்வது குலத்தொழிலாகும். தற்போது மண்பாண் டங்களுக்கு போதிய வரவேற்பும், வருவாயும் இல்லை. இருப்பினம் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள நானும், எனது சகோதரரும் குலத் தொழிலை கைவிட மனமின்றி, கைவினைக் கலைஞர்களை ஒருங்கி ணைத்து மண் பாண்டத் தொழிலுக்கு இணையான, நவீன தொழில் நுட்பத்தில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இத்தொழிலில் வருவாய் ஈட்ட முடியும் என்ற போதிலும், மன நிறைவு கிடைப்பதால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வதில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறோம்.

    விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், வாடிக்கை யாளர்கள் விரும்பு வகையில், மிக நேர்த்தியாக விநாயகர் சிலை வடி வமைத்து கொடுப்பதால், தமிழகம் முழுவதும் இருந்துஆர்டர்கள் குவிந்து வருகிறது என்றார்.

    • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
    • மேலும் விவரங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ேபாலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது.

    பெருந்துறை:

    பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தியை விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பெருந்து றை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும்.

    சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாதுகாப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி வைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் பெருந்துறை, சென்னிமலை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய போலீஸ் நிலையம் பகுதிகளில் விழா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.
    • விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம், பாடல்களுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூனம்பட்டி ஆதின திருமடம் ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரி தலைவர் அருட்செல்வம், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி பொருளாளர் மஞ்சு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மோகன்குமார், சர்கார் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கூலிபாளையம் (ஜே.சி.பி.) அண்ணாதுரை, கோபால், ஜெயமுருகன் லாரி சர்வீஸ் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் ஆண்டவர் யு.ராமசாமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம் நடத்தி பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகிேயார் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வானவேடிக்கை, மேளதாளங்களுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, புதூர், எம்.ஜி.ஆர். நகர், புல்லாவெளி கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் விநாயகர் சிலை கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு தடியன்குடிசை ஆற்றில் கரைக்கப்பட்டன.

    இந்த ஊர்வலத்தின் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா, பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர் , ஐந்து சாலை சந்திப்பு மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பிறகு தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முத்துவல்லி மற்றும் தலைவர்களிடத்தில் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முஸ்லிம் ஜமாத்தாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். அதற்கு ஜமாத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சுல்தானிய பள்ளிவாசல், மரக்கடை பள்ளிவாசல், கண்ணன் நகர் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

    • விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில்சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில் சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து 9.8.2018 நாளிட்ட பொது (சட்டம்(ம) ஒழுங்கு -B) துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின் படி தொடர்புடைய துறைகளில் பெறப்பட வேண்டிய ஆட்சேபணையின்மை கடிதத்துடன் மாநகர பகுதிகளில் அந்தந்த உதவி காவல் ஆணையர்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களிடமும் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகள் மட்டும் இருந்திட வேண்டும்.

    எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் பொதுமக்கள் அமைப்பினர்கள் உரிய படிவத்தினை தொடர்புடைய காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள், மற்றும் ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும் பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று சிலைகள் நிறுவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மேலும் சிலைகள் வைத்து வழிபட அளிக்கப்படும் விண்ணப்பம் வருவாய் கோட்டாட்சியர் - உதவி காவல் ஆணையர்களால் நிராகரிப்பு செய்யப்படும் இடங்களில் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை முறையே திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள்- அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    1. சாமளாபுரம் குளம்.2. ஆண்டிபாளையம், பி.ஏ.பி வாய்க்கால்.3. பொங்கலூர்,பி.ஏ.பி வாய்க்கால். 4. எஸ்.விபுரம், பி.ஏ.பி வாய்க்கால். 5. கெடிமேடு, பி.ஏ.பி வாய்க்கால். 6. எஸ்.வி.புரம் வாய்க்கால்.7. கணியூர், அமராவதி ஆறு.எனவே மேற்கண்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும், மேலும் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பொருட்டு எடுத்துச் செல்லுமாறும் பொதுமக்கள்- அமைப்புகள் ஆகியோர்களுக்கு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
    • தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .

    மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.

    • விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • 1-ந்தேதி காலை 7 மணிக்கு விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட் கிழமை)காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கொடி மரத்துக்கு விசேஷ அபிஷே கங்கள் நடக்கிறது. அதன் பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்படுகிறது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு கொடியேற்று கின்றனர். இரவு 18 கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. இந்ததிருவிழா வருகிற 31-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் காலையில் யாக சாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவைக ளும்நடக்கிறது. 7-ம் திரு விழாவான 28-ந்தேதி காலையில் 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 31-ந்தேதி காலை 8 மணிக்கு விநாயகருக்கு 21 வகையான அபிஷேகங்களும் 10.30 மணிக்கு மகா கும்பாபி ஷேகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, சாயராட்சை தீபாரா தனை, உற்சவமூர்த்தி அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. 6.30மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட மூஷிக வாக னத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் (1-ந்தேதி) காலை 7 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
    • முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்களின் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விசர்ஜனம் ஊர்வலம் வரும் பகுதிகளான கொங்கு மெயின் ரோடு, வெள்ளியங்காடு, செல்லம்நகர் மற்றும் ஒன்று திரளும் இடமான புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களை திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் குறித்த விபரம், இதற்கு முன் அந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், பதட்டமான பகுதிகள் என அனைத்தையும் கேட்டறிந்தார். 

    ×