search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
    X

    விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

    • விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • 1-ந்தேதி காலை 7 மணிக்கு விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட் கிழமை)காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கொடி மரத்துக்கு விசேஷ அபிஷே கங்கள் நடக்கிறது. அதன் பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்படுகிறது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு கொடியேற்று கின்றனர். இரவு 18 கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. இந்ததிருவிழா வருகிற 31-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் காலையில் யாக சாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவைக ளும்நடக்கிறது. 7-ம் திரு விழாவான 28-ந்தேதி காலையில் 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 31-ந்தேதி காலை 8 மணிக்கு விநாயகருக்கு 21 வகையான அபிஷேகங்களும் 10.30 மணிக்கு மகா கும்பாபி ஷேகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, சாயராட்சை தீபாரா தனை, உற்சவமூர்த்தி அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. 6.30மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட மூஷிக வாக னத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் (1-ந்தேதி) காலை 7 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×