search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா
    X

    மஞ்சள்பரப்பு கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா

    • பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வானவேடிக்கை, மேளதாளங்களுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, புதூர், எம்.ஜி.ஆர். நகர், புல்லாவெளி கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் விநாயகர் சிலை கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு தடியன்குடிசை ஆற்றில் கரைக்கப்பட்டன.

    இந்த ஊர்வலத்தின் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×