search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்கால்"

    • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
    • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

    கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    • குடமுருட்டி ஆறு மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.
    • ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வக்கீல் ஜீவக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றனர்.

    ஆனால் இதுவரை ஈரப்பதம் தளர்வு குறித்து குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. உடனடியாக ஈரப்பதம் தளர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    டயர் அறுவடை எந்திரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வரவழைக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் போது விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இம்முறை இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. எனவே உடனடியாக காவிரி டெல்டா விவசாயிகளிடம் அமைச்சர்கள் குழு நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவையாறு அருகே கோனேரிராஜபுரத்தை சேர்ந்த விவசாயி வீரராஜேந்திரன் அளித்துள்ள மனுவில் :-

    கோனேரிராஜபுரம் வருவாய் கிராமத்தில் குடமுருட்டி ஆற்று மூலம் பாசம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.

    இவைகளை உடனடியாக தூர் வார வேண்டும். குடமுருட்டி ஆற்றில் வாயிலாக பாசனம் பெறும் வாய்க்கால்கள் தலைப்பில் இருந்து கோனேக்கடுங்கால் ஆற்றில் சேர்வது வரையில் உள்ள வரைபடத்தை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பாசனதாரர் சங்கம் தலைவர் தங்கவேல் கொடுத்துள்ள மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து கதிர் அறுத்தும், அறுக்க முடியாமலும் நெல் மற்றும் வைக்கோல் வீணாகிவிட்டது.

    இது தொடர்பாக அரசு நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில்,

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகள் மழை சேத பாதிப்புகள் வருவாய்த்துறை அதிகாரி களை கொண்டு மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தூர் வாரும் பணியை தொடங்குவதால் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பதால் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெறுவதில்லை. எனவே தூர் வரும் பணியை எந்தெந்த வாய்க்கால் வெட்ட வேண்டும் என விவசாயிகளின் கருத்துக்க ளை கேட்டு உடனே தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
    • வாய்க்காலின் வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருநகரி வாடிகால் வாய்க்கால் உள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் முக்கிய வடிகாலாக உள்ளது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளக்கதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரெயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இந்த வாய்க்காலில் ஆகாயத்தமாரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.

    எனவே திருநகரி வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும், வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
    • கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-

    தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
    • 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்களைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

    பயிர்களை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், இந்தப் பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு சென்ற வருடம் தூர்வாரப்பட்ட நிலையில், மீண்டும் வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.

    சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த அழிஞ்சியாறு வாய்க்காலில் தண்ணீர் சீராக சென்று சேர முடியாத அளவுக்கு புல் மற்றும் செடிகள் மண்டி கிடந்தன.

    இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகளே ஒன்றிணைந்து கோரை புற்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    தற்போது விவசாயிகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி உள்ளனர்.

    இந்த வாய்க்காலை தூர் வாரிய செலவினத்தை அதிகாரிகள் வழங்கவும், மேலும் தொடர்ந்து வாய்க்காலை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
    • ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.

    தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.

    அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,

    • வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
    • ஆகாயதாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் மற்றும் இடும்பவனம் பகுதியில் செல்லும் கழனியாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கியாறு, மரைக்கா கோரையாறு ஆகியவற்றில் ஆகாயதாமரை செடிகள் மண்டியுள்ளதால் மழை காலங்களில் வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    செடிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சங்கர், முருகையன் மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் மற்றும் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு ஆகாயதாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
    • இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாந்தாமாணிக்கம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

    சீதாலட்சுமியின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

    உரிய சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.

    இந்த மண் சாலையின் நடுவே திருமக்கோட்டை வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்காலின் நடுவே பாலம் இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை தண்ணிரில் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.

    நம்நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போதும் முறையான சாலை வசதியோ பாலமோ இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணமாக அமைந்துள்ளது.

    எனவே அரசு அதிகாரிகள், மாவட்ட நிறுவாகம் சாந்தாமானிக்கம் சுடுகாட்டிற்கு உடனடியாக சாலை மற்றும் பாலம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×